ஃபினாலே டாஸ்க்: சோம் உடன்  காரசார விவாதம், தனக்கான இடத்தை வாதாடி பெற்ற ஆரி!

பிக்பாஸ் வீட்டில் இன்று ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் மொத்தம் 5 சுற்றுகள் உள்ளன என்பதும் 5 சுற்றுகளிலும் சேர்ந்து முதலிடத்தை பிடித்தவர் நேரடியாக ஃபினாலேவுக்கு தகுதி செய்யப்படுவார் என்பது மட்டுமின்றி அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்தும் காப்பாற்றப்படுவார் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்று வெளியான மூன்று புரமோவில் இருந்து ஒரு டாஸ்க்கில் பாலாஜி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதாக தெரிகிறது. இந்த டாஸ்க்கில் அதிக நேரம் பலூனை கையில் வைத்து தாக்குப்பிடித்தது யார் என்று வரிசைப்படுத்தும்போது சோம் மற்றும் ஆரி இடையே விவாதம் நடைபெற்றது.

5வது இடத்திற்கும் சோம், ஆரி ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்ய, சோம் இடையில் கையை வளைத்ததாகவும், ஆனால் தான் கையை நேராக வைத்திருந்ததாகவும், அதனால் தனக்கே ஐந்தாம் இடம் வேண்டும் என்றும் ஆரி வாதாடினார். ஒரு கட்டத்தில் சோம் இதனை ஒப்புக்கொண்டாலும் ரியோ ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் வாக்குவாதம் தொடர்ந்தது.

கடைசியில் ஒரு வழியாக ஆரி வாதாடி தனக்கான ஐந்தாவது இடத்தை பிடித்துவிட்டார். சோம்க்கு நான்காவது இடமே கிடைத்தது. இந்த டாஸ்க்கில் அதிக நேரம் தாக்குப்பிடித்த வகையில் பாலாஜிக்கு 7வது இடமும் அதனையடுத்து ரியோ, ஆரி, சோம், ரம்யா, கேபி மற்றும் ஷிவானி கடைசி இடத்திலும் உள்ளனர்.

ஒட்டுமொத்த டாஸ்க்கும் முடிந்தபின்னர் தான் ஃபினாலேவுக்கு நேரடியாக தகுதி பெறுபவர் யார் என்பது தெரியவரும்.

More News

'மாஸ்டர்' இயக்குனரை வளைக்க தயாராகும் அண்டை மாநில மாஸ் நடிகர்கள்!

'மாநகரம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது திரைப்படமான 'கைதி' என்ற மிகப்பெரிய வெற்றிக்கு பின் அவருடைய மூன்றாவது படமே தளபதி விஜய்யை

விஜய் தந்தை குறித்து பிக்பாஸ் நடிகை கூறியது என்ன? வைரல் புகைப்படங்கள்

விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 'நான் கடவுள் இல்லை' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி மற்றும் சாக்சி அகர்வால் நடித்து வருகின்றனர்

டீ கடையில் நின்று தம் அடிக்கும் சிறுவர்களே உஷார்… எச்சரிக்கும் புது சட்டம்!!!

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை மத்திய அரசு அதிரடியாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறது

பிரபலத் தொழில் அதிபர் ஜாக் மா காணவில்லையா??? பரபரப்பு தகவல்!!!

பிரபலத் தொழில் அதிபரும், அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா காணாமல் போய்விட்டார் என்ற பரபரப்பு தகவலை தற்போது ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன

முதல்வருக்கு நன்றி கூறி 'மாங்கல்யம் தந்துனானே' பாடிய சிம்பு!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஏற்கனவே தளபதி விஜய் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில்