வெளியில வந்து எல்லாதையும் சொல்றேன்: அப்பாவை சமாதானம் செய்யும் லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் ஃபைனல் வரை வந்துவிட்ட லாஸ்லியா, இந்த சீசனின் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவினிடம் நெருக்கம் வேண்டாம் என அவரது தாய் மற்றும் தந்தை அறிவுரை கூறிவிட்டு சென்ற பின்னரும் கவினுடன் பழகுவதை அவரால் தவிர்க்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்று வீடியோ கால் முலம் அப்பாவிடம் பேசும் லாஸ்லியா, அப்பாவிடம் சாரி கேட்டுவிட்டு, என்னை தப்பாக நினைக்காதீங்க, வெளியில வந்து எல்லாவற்றையும் சொல்கிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூற அதற்கு அவரது அப்பா, ‘சந்தோஷமா இரு’ என்று கூறுகிறார். இந்த காட்சிக்கு பொருத்தமான ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்புக்கு முன்னே’ என்ற பாடல் பின்னணி ஒலிக்கின்றது

இன்றைய முதல் புரமோவில் கவின் மற்றும் தர்ஷனின் வருகையும் இந்த புரமோவில் அப்பாவிடம் பேசும் லாஸ்லியாவின் காட்சிகளை பார்க்கும்போது இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் போகும் என தெரிகிறது