வெளியேறும் முன் லாஸ்லியாவை அழவைத்த கவின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு இன்று கவின் வெளியேறுவது போன்ற காட்சிகள் புரமோ வீடியோக்களில் வெளியாகி வருகிறது. இன்றைய முதல் புரமோவில் தான் வெளியேறுவதற்கான நியாயமான காரணத்தை சாண்டியிடம் கவின் விளக்கினார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இரண்டாவது புரமோவில், கவின் லாஸ்லியாவிடம் ‘உன்கிட்ட நான் சொன்னதை மட்டும் ஞாபகம் வச்சுகிட்டு மீதி நாட்களில் இரு’ என்று கூற லாஸ்லியா கோபத்துடன் ‘எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை’ என்று கூறுகிறார். இதனையடுத்து ‘ஞாபகம் இல்லை என்றால் அந்த போட்டோக்களை எல்லாம் பாரு’ என்று கோபமாக சொல்லிவிட்டு பெட்டி படுக்கையுடன் வெளியேற தயாராகிறார்.

அதன்பின் மீண்டும் லாஸ்லியாவிடம் வரும் கவின், ‘இந்த போட்டோக்களை வைத்துக்கொள் என லாஸ்லியா குடும்பத்தினர்களிடன் போட்டோக்களை கொடுக்கின்றார். எனக்கு தெரியும் நான் அவங்களுக்காகத்தான் இங்கே இருக்கின்றேன், இல்லையென்றால் நான் எப்போதோ வெளியே போயிருப்பேன் என லாஸ்லியா கூற, அதற்கு கவின், ‘நான் எதுக்கு இவ்வளவு நான் இருந்தேன்னு எனக்கு தெரியும்’ என்று கூற அதனால் லாஸ்லியா அழுகத்தொடங்குகிறார்.

கவின் வெளியேறுவது போன்று புரமோக்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் கவின் வெளியேறியிருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. நேற்றே கவின் வெளியேறியிருந்தால் இன்று காலையே கவின் வெளியேறியது குறித்த செய்தி வெளிவந்திருக்கும். எனவே கடைசி நேரத்தில் ஏதாவது திருப்பம் ஏற்பட்டு கவின் உள்ளே நீடிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

More News

'அசுரன்' படத்தின் புதிய அப்டேட்டை அறிவித்த ஜிவி பிரகாஷ்குமார்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது 

'பாபநாசம்' பாணியில் பிணத்தை மறைத்து 7 ஆண்டுகள் தப்பித்த நெல்லை குடும்பம்!

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படத்தில் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரு கொலையை செய்துவிட்டு அந்த கொலை கடைசி வரைக்கும் போலீசுக்கு தெரியாமல் தப்பித்தனர்

என்னால கூச்சமே இல்லாம மேடையில நிக்க முடியாது: கவின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு உடனே வெளியேறலாம் என்ற ஒரு வாய்ப்பை நேற்று பிக்பாஸ் வழங்கியவுடன்

அஜித் பெயரை கூறியதும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற 'தளபதி 64' நாயகி!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது 

விஜய்யை அடுத்து ரஜினியுடன் மோதும் கார்த்திக் 

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் அதே நாளில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படமும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.