ரெண்டு பேரும் என்னை வேற மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க: கவின் வருத்தம்

சாக்சியுடன் காதல் பிரேக் அப், லாஸ்லியாவுடன் புதுக்காதல் என கவினின் காதல் இரட்டை வேடம் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களே கவினை நேருக்கு நேர் எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர். பிக்பாஸ் வீட்டின் ஒட்டு மொத்த போட்டியாளர்களும் கவினுக்கு எதிராக திரும்பியதால் மனமுடைந்த கவின் வீட்டில் இருந்து வெளியே செல்லும் முடிவை எடுத்துள்ளார்.

சமாதானம் செய்ய வந்த சாக்சியை தவிர்த்த கவின், 'என்னை ரெண்டு பேரும் வேற மாதிரி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். நான் மேலும் இந்த வீட்டில் இருந்தால் பிரச்சனைகள் தொடரத்தான் செய்யும். அதனால் எல்லோரும் என்னை நாமினேட் செய்துவிடுங்கள். நான் இந்த வீட்டை விட்டு போய்விடுகிறேன். நாமினேட் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் அதையும் செய்ய தயாராக இருக்கின்றேன்' என்று கவின் அனைவர் முன்னிலையில் ஓப்பனாக கூறுகிறார். இந்த புரமோவின் பின்னணியில் 'போகாதே போகாதே' பாடல் ஒலிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கவின் ஜாலியாக இருந்ததால் அவரை எல்லோருக்கும் பிடித்தது. இந்த சீசனின் சாம்பியன் ஆகவும் அவருக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றதும், இதனால் கிடைத்த புகழ் அவருக்கு பெருமளவு பயன்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாகிவிட்டது. பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக வெறுக்கும் ஒரு போட்டியாளராக கவின் மாறியதற்கு அவரது காதல் நாடகமே காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

மீண்டும் இணைகிறதா 'வேலாயுதம்' கூட்டணி?

கடந்த 2011ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த 'வேலாயுதம்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக விஜய் நடிக்கவிருக்கும்

நைட்டு ரெண்டு மணிக்கு என்ன ஃபிரெண்ட்ஷிப்? கவினை போட்டு தாக்கும் ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்ப நாட்களில் கவின், பிக்பாஸ் வீட்டின் ஹீரோ போல் வலம் வந்து கொண்டிருந்தார்.

நயன்தாரா, ஓவியாவை அடுத்து ஜோதிகாவிற்கு கிடைத்த பெருமை!

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது ரிலீஸ் ஆகும் தினத்தில் அதிகாலை காட்சி திரையிடப்படுவது க

பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறாரா கஸ்தூரி: அவரே கொடுத்த விளக்கம்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் சமீபத்தில் தொடங்கியது. இதில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய நான்கு போட்டியாளர்கள்

விஜய்சேதுபதிதான் காரணம்: மொட்டை கடிதத்திற்கு விளக்கமளித்த சேரன்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு வந்த மொட்டை கடிதத்திற்கு விளக்கமளித்த நிலையில் சேரனிடம் கேட்கப்பட்ட கேள்வியான