சேரன் வெளியேறியதால் கடுப்பான கஸ்தூரி: 

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஷெரின் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பல ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் நேற்று ஷெரின் முதல் நபராக காப்பாற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பின்னர் கவின் காப்பாற்றப்பட்டு லாஸ்லியா மற்றும் சேரன் உள்ளே அழைக்கப்பட்டு ஒரு நாடகம் நடத்திய பின்னர் சேரன் வெளியேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார் எண்ட்ரியாக உள்ளே சென்ற நடிகை கஸ்தூரி இரண்டே வாரங்களில் வெளியே அனுப்பப்பட்ட நிலையில் தற்போது சேரனின் வெளியேற்றம் குறித்து தமது ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையையும் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சியை அவர் விமர்சனம் செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே சேரனுக்கு ஆதரவு கொடுத்து வந்த கஸ்தூரி, பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த இரண்டு நாட்களிலும் சேரனுடன் நல்ல நட்புடன் இருந்தார். எனவே தற்போது சேரன் வெளியேற்றப்பட்டதால் அவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே அவர் ஒரு சில பேட்டிகளில் ’பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது பார்வையாளர்களின் வாக்குகளினால் அல்ல என்றும் சேனல் மற்றும் பிக்பாஸ் குழுவினர் எடுக்கும் முடிவு தான் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கஸ்தூரியின் இந்த கருத்திற்கு சமூக வலைதளங்களில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தோண்டி துருவாமல் படத்தை ரசியுங்கள்: காப்பான் விமர்சகர்களுக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்

கடந்த வெள்ளியன்று வெளியான சூர்யாவின் காப்பான் திரைப்படம் ஊடகம் மற்றும் விமர்சகர்களின் கலவையான விமர்சனங்களையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது 

முடிவுக்கு வந்த சந்தானம் நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ள நிலையில், தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

ஷெரினுக்காக காரசாரமான ரிஸ்க் எடுக்கும் தர்ஷன்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சேரன் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் தற்போது கவின், முகின், தர்ஷன், ஷெரின், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய 6 பேர்கள் மட்டுமே உள்ளனர் 

இடைத்தேர்தலில் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன.

விஜய் சொன்னதை செய்ய தவறியதால் தவறு நடந்து கொண்டிருக்கின்றது: சீமான்

நடிகர் விஜய் சமீபத்தில் தனது 'பிகில்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் அதிகபட்சமாக ஒரு 15 நிமிடங்கள் பேசியிருப்பார். ஆனால் அவர் பேசியதை வைத்து