'ஐ லவ் யூ' சொன்ன அபிராமி: முகினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்

பிக்பாஸ் வீடு என்பது ரியாலிட்டி ஷோ நடைபெறும் வீடா? அல்லது காதலர்கள் குடியிருக்கும் வசந்த மாளிகையா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இந்த சீசன் ஆரம்பமானதில் இருந்து ஒரே காதல் மயமாக உள்ளது. முதலில் கவினை காதலிப்பதாக அபிராமி கூற, அதன்பின் கவினை சாக்சியும், சாக்சியை கவினும் காதலிப்பதாக தெரிந்தது. பின்னர் திடீரென கவின் லாஸ்லியாவை காதலிப்பது போல் பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் நிகழ்ச்சியை நகர்த்தி சென்றனர்.

இதுவொரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் முகினை அபிராமி லவ் செய்ய, அந்த காதலை ஏற்க முகின் தயக்கம் காட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று அபிராமி ஒப்பனாக முகினிடம் தனது காதலை தெரிவிக்கும் வகையில் 'ஐ லவ் யூ' என்று சொல்லிவிட்டார். இதற்கு தான் என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை என்று முகின் கூற, நீ ஒன்றும் சொல்ல வேண்டாம், என் காதலை ஏத்துக்கோன்னு நான் சொன்னேனா? நான் சந்தோஷமாக இருக்கின்றேன்' அது போதும்' என்று பதிலளிக்கின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் திகட்ட திகட்ட வருவதால் பிக்பாஸ் வீடு ஒரு சுவர் கட்டிய‌ மெரீனா பீச், பூங்கா, சினிமா தியேட்டர், மற்றும் லாட்ஜ் மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். இதே ரீதியில் சென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு போர் அடிக்கும் என்பதை பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் எப்போது புரிந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

தமன்னாவிற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் செய்யும் உதவி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடிப்பில் இந்த ஆண்டில் ஏற்கனவே 'கண்ணே கலைமானே' மற்றும் 'தேவி 2' ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தடுக்கி விழுந்த கவின், மயங்கி விழுந்த சேரன்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் ஐந்து குழுக்களாக பிரிந்து ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் மதுமிதா-அபிராமி, சாக்சி-லாஸ்லியா, கவின் - சேரன், சாண்டி-தர்ஷன், முகின் - ஷெரின் என ஐந்து ஜோடிகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது

பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவின் இரங்கல் செய்தி!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளருமான ராஜலட்சுமி  பார்த்தசாரதி அவர்கள் இன்று தனது 93வது வயதில் காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

காஷ்மீர் பிரச்சனையில் மோதிக்கொண்ட இந்திய பாகிஸ்தான் வீரர்கள்

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்ட விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

காஷ்மீர் பிரச்சனை: அமலாபாலுக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்

காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது சிறப்பு அந்தஸ்தை நேற்று மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன்களாக பிரிக்க முடிவு செய்துள்ளது.