'படுக்கைக்கு அழைத்தவரை செருப்பால் அடிப்பேன் நாயே என்று கூறியிருக்கிறேன்': பிக்பாஸ் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,August 21 2024]

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவரை செருப்பால் அடிப்பேன் நாயே என்று கூறியிருக்கின்றேன் என பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நடிகை சனம் ஷெட்டி வந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ’கேரளா சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை கூறி உள்ளது, இந்த உண்மையை விலை கொண்டு வந்த கமிஷனுக்கு நன்றி.

அதேபோல் தமிழ் திரை உலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருக்கிறது, எனக்கும் அது நடந்திருக்கிறது. வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களை செருப்பால் அடிப்பேன் நாயே என்று நானே திட்டி இருக்கிறேன். பாலியல் ரீதியாக அணுகுபவர்களிடம் விலகி இருக்க வேண்டும்

உங்கள் திறமைக்கு கிடைக்காத எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம், தமிழ் சினிமாவில் எல்லோரும் அப்படியான ஆட்கள் என்று சொல்லவில்லை, என்றாலும் இங்கும் பாலியல் தொல்லை இருக்கிறது, ஆண்கள் நமக்காக போராடுவார்கள் என்று எதிர்பார்க்காமல் நம் உரிமையை நாமே தான் போராடி பெற்றாக வேண்டும்’ என்று கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

விஜய்யின் 'கோட்' திரைப்படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்? வெங்கட் பிரபு அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்து அறிவிப்பை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

ரசனைக் குறைபாடுள்ளவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.. ஒரு சிலருக்கு எச்சரிக்கை.. கமல்ஹாசன்

சூரி நடித்த 'கொட்டுக்காளி' என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்து

சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்ட வடிவேலு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நடிகர் சிங்கமுத்துவிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு விசாரணையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி

விஜய் டிவி  சீரியல் நாயகிக்கு கிடைத்த சினிமா வாய்ப்பு.. ஹீரோ யார் தெரியுமா?

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ஹீரோ யார் என்பது உள்பட சில தகவல்கள் வெளியாகி உள்ளன. 

'மகாராஜா' படத்தை மிஸ் செய்தாரா சாந்தனு? அவரே சொன்ன தகவல்..!

இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று கே.பாக்யராஜ் போற்றப்படும் நிலையில் அவரது மகன் சாந்தனு ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றி படத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்.