பெசன்ட் நகர் பீச்சில் சண்டை போட்ட இருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களா? டிஆர்பி எகிறும் என தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,August 24 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்த மாதம் முதல் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பெசன்ட் நகர் பீச்சில் சண்டை போட்டுக் கொண்ட 2 பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறும் என்று கூறப்படுகிறது.

பார்த்திபன் நடித்து, இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ரேகா நாயர். இவர் அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்திருந்ததை சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்திருந்தார். இதனை அடுத்து இருவரும் பெசன்ட் நகர் பீச்சில் சந்தித்துக் கொண்ட போது கடுமையாக சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரேகா நாயர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதனும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் மட்டும் உறுதி செய்யப்பட்டால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு செம என்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகர் பிருத்விராஜ் , டிரைவர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.