கமல் தெரிவித்த மீன் கதை: ரேகா, சனம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நிகழ்ச்சி என்பதால் காரசாரமான விவாதங்கள் மற்றும் சுவாரசியமான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இன்றைய முதல் புரமோவில் அட்டகாசமான கெட்டப் உடன் தோன்றிய கமல்ஹாசன், சுரேஷின் ஹீரோயிஸம் குறித்து மறைமுகமாக தெரிவித்த நிலையில் இரண்டாவது புரமோவில் ரேகா மற்றும் சனம் குறித்து பேசியுள்ளது இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதை அவர் பூடகமாக மீன் கதையுடன் தெரிவித்துள்ளார்.

’ஆளாளுக்கு ஒரு குரூப்பில் சேர்த்துக் கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உருவாகி இருக்கின்றது. இந்த 17 போட்டியாளர்களை சேர சோழ பாண்டியர்கள் என்று பிரித்தோம் என்றால் அதில் ரேகா மற்றும் சனம் ஆகிய இருவரையும் பாண்டியன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் மீன் கொடியை அப்படி தூக்கிப் பிடிக்கிறார்கள். பாண்டியர்கள் கொடியிலும் இரண்டு மீன்கள் இருக்கும்’ என்று புரிந்தும் புரியாமலும் ‘மைக்கேல் மதனகாமராஜன்’ பட டயலாக் போல் மீன் கதையை கமல் பேசியுள்ள புரோமோ தற்போது வெளியாகியுள்ளது

மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளதை கமல்ஹாசன் ஒப்புக்கொண்டதை இந்த புரமோ பார்வையாளர்களுக்கு விளக்கியுள்ளது

More News

'அர்ச்சனா ஒரு பெரிய தலைவலி' என கூறிய போட்டியாளர் யார்?

சமீபத்தில் வைல்டுகார்ட் போட்டியாளராக உள்ளே வந்த அர்ச்சனா மற்ற போட்டியாளர்களுக்கு சவாலான போட்டியாக இருப்பார் என கருதப்படுகிறது.

உள்ளேயும் முகமூடி விழ ஆரம்பிச்சிருச்சு: கமல்ஹாசன்

பிக்பாஸ் சீசன் 4 முதல் நாளிலிருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

பட்டினி வரிசையில்… பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட இந்தியா மோசம்!!!

உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்கும் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி இருக்கிறார்கள் என குளோபல் ஹங்கர்ஸ் இண்டெக்ஸ் தெரிவித்து உள்ளது.

என் கதையை திருடிவிட்டார்: கார்த்திக் சுப்புராஜ் மீது பிரபல எழுத்தாளர் குற்றச்சாட்டு!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் என் கதையை திருடி விட்டார் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிறந்த நாளில் கீர்த்திசுரேஷூக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்றும் அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்