கடைசி நேரத்தில் மாயா சொன்ன விஷயம்.. மற்ற ஃபைனலிஸ்ட் சொன்னது என்ன?

  • IndiaGlitz, [Sunday,January 14 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் டைட்டில் வின்னர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும். இந்த நிலையில் கடைசி நேரத்தில் பிக் பாஸ் பைனலிஸ்ட் போட்டியாளர்கள் தங்களை பற்றிய சில வார்த்தைகள் கூற அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்களுடைய நிலையை எடுத்துக் கூறுகின்றனர்.

அப்போது மாயா ’நான் கேமராவுக்காக எதுவுமே பண்ணவில்லை, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நான் ஹானஸ்ட் ஆக இருந்தேன்’ என்று கூறியுள்ளார்.

மணி கூறிய போது ’ஒருத்தங்க மேல உண்மையான அக்கறை இருந்தால் உடனே போய் சொல்வதை என்னால் நிறுத்த முடியவில்லை என்று நினைக்கிறேன்’ என்றார்.

விஷ்ணு கூறியபோது, ‘பூர்ணிமா என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன், இதை நான் கண்டிப்பாக சொல்லியே ஆகனும்’ என்று கூறினார்.

அர்ச்சனா கூறியபோது, ‘இந்த அர்ச்சனா இதுக்கு மேல வரப்போகிற எந்த தடையா இருந்தாலும் அதை தைரியமா எதிர்த்து நிற்பான்னு எனக்கு தோணுது’ என்று கூறினார்.

தினேஷ் கூறியபோதும், ‘அந்த டிராபி எனக்கு கையில கிடைக்கும், அதை அன்பான ஒருத்தங்ககிட்ட கொடுக்கனும்ன்னு ஒரே ஒரு நோக்கம் தான்’ என்று கூறினார்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கடைசி புரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.