பிக்பாஸ் சீசன் 5 எப்போது? 3வது அலைக்கு முன்பே தொடங்க முடிவு!

பிக்பாஸ் தமிழ் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதமே சீசன் 5 தொடங்க திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது படிப்படியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பிக்பாஸ் குழுவினர் நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாட்டை தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்து மூன்றாவது அலை தொடங்கும் முன்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கி விட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியானது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குகொண்ட தர்ஷா, பவித்ரா, சுனிதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அதே போல் பாடகர் தெருக்குரல் அறிவு, ஆர்ஜே வினோத் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் மன்சூர் அலிகான் உள்பட ஒரு சிலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மிக விரைவில் பிக்பாஸ் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

More News

லைக்குகளுக்காக பதிவிட்ட புகைப்படம்...! தற்கொலையில் முடிந்த பரிதாபம்...!

தனது புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நிதி திரட்டுவதற்காக செஸ் மாஸ்டருடன் போட்டிப்போடும் பிரபல பாலிவுட் நடிகர்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அமீர்கான் கொரோனா நேரத்தில் நொடிந்துபோய் இருக்கும் மக்களுக்கு நன்கொடை வழங்கும் வகையில் நிதி திரட்டி வருகிறார்.

நாடகத்தை நகைச்சுவையாக மாற்றியவர்: நினைவு நாளில் நினைவு கூறும் கமல்ஹாசன்

பிரபல நாடக, திரைப்பட நடிகர் மற்றும் வசனகர்த்தா கிரேஸி மோகன் அவர்கள் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் கமலஹாசன் டுவிட்

விஷ்ணுவிஷால் - ஜூவாலா கட்டா டான்ஸ்: வைரல் புகைப்படம்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலுக்கும், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே

ஆம்புலன்ஸ் விபத்து...! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலி....!

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தின் மீது மோதி விபத்து உண்டானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.