பவானிரெட்டி மடியில் அபிஷேக்: கோர்த்துவிட்ட ராஜூமுருகன்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளரான பவானி ரெட்டியின் மடியில் அபிஷேக் படுத்துக் கொண்டு இருப்பதை ராஜூமுருகன் கோர்த்து விட்ட காட்சிகள் நேற்று எபிசோடில் இருந்தது பார்க்கும்போது புதிய காதல் ஜோடியா? என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பவானி ரெட்டி மற்றும் அபிஷேக்ராஜா ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களாக நெருக்கமாகி வருகின்றனர். பவானி ரெட்டி இன்னும் இளமையாக இருக்கிறார் என்றும் அவரை கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கூட ப்ரொபோஸ் செய்யலாம் என்றும் அந்த அளவுக்கு அவர் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள் என்றும் அபிஷேக் ராஜா அவரை விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து நேற்றைய நிகழ்ச்சியில் பவானி ரெட்டியின் மடியில் அபிஷேக் படுத்துக்கொள்ள அவரது நெற்றியை பவானி ரெட்டி பிடித்து விடும் காட்சிகள் இருந்தன. இதனை பார்த்த ராஜூ ஜெயமோகன் இமான் அண்ணாச்சியிடம் கோர்த்துவிட, இமான் அண்ணாச்சி, பவானி ரெட்டியிடம் அவன் பாட்டுக்கு ஏதாவது சொல்லி உன்னை அழ வைத்துவிடுவான் என்று கூறுகிறார்.

முன்னதாக பவானி ரெட்டியிடம் நீங்கள் நடித்த சீரியல் காமெடி சீரியலா? அல்லது சீரியஸ் சீரியலா? என்று கேட்க அதற்கு பவானி ரெட்டி காமெடி மற்றும் சீரியஸ் இரண்டுமே உண்டு என்று கூறுகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதலர்கள் உருவாகி வருவதை பார்த்து வருகிறோம். ஓவியா ஆரவ், மகத் - யாஷிகா, கவின் - லாஸ்லியா மற்றும் பாலாஜி - ஷிவானி ஆகியோரை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் பவானி ரெட்டி மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய இருவரும் ஏற்கனவே தங்கள் துணையை விவாகரத்து செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.