ஐஸ்வர்யாவை மீண்டும் காப்பாற்றிய பிக்பாஸ்: பார்வையாளர்கள் அதிருப்தி

  • IndiaGlitz, [Tuesday,July 24 2018]

பிக்பாஸ் வீட்டில் எது நடக்கின்றதோ இல்லையோ, தினமும் சண்டை மட்டும் தவறாமல் நடக்கின்றது. அதில் எந்த சண்டையாக இருந்தாலும் ஐஸ்வர்யா அதில் இடம்பெற்றிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தன் மனதில் ஓவியா என்ற நினைப்பில் செயல்பட்டு வரும் ஐஸ்வர்யாவை பார்வையாளர்கள் அதிகளவு வெறுத்தாலும் பிக்பாஸ் மீண்டும் மீண்டும் அவரை காப்பாற்றி வருகிறார். கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் ஐஸ்வர்யாவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்தபோதிலும் பிக்பாஸ் நித்யாவை வெளியேற்றும் முடிவினை எடுத்தார். இதனால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வாரத்திற்கான எவிக்சன் பட்டியல் தயாரானது. அதில் ஐஸ்வர்யா இடம்பெற்றிருந்தார். சரி, இந்த வாரமாவது ஐஸ்வர்யாவை வெளியேற்றலாம் என பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தபோது, ஐஸ்வர்யாவுக்கு ஒரு புதிய சக்தியை கொடுத்து, அந்த சக்தியின் மூலம் யாரையாவது எவிக்சன் பட்டியலில் இருந்து சேவ் செய்து கொள்ளலாம் என்று கூறினார். ஐஸ்வர்யா புத்திசாலித்தனமாக தன்னை சேவ் செய்து கொண்டார். எனவே இந்த வாரமும் ஐஸ்வர்யா வெளியேற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

இந்த நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் மகத், மும்தாஜ், பொன்னம்பலம், வைஷ்ணவி மற்றும் யாசிகா ஆகியோர் உள்ளனர். நேற்று வைஷ்ணவி நடந்து கொண்ட விதத்தை பார்க்கும்போது அவரை பிக்பாஸ் இந்த வாரம் வெளியேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பாலாவின் 'வர்மா' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின்

சூப்பர் சூப்பர் சிங்கர் செந்திலுக்கு கிடைத்த மேலும் ஒரு வாய்ப்பு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல கிராமிய இசை பாடகர் செந்தில் டைட்டிலை வென்றார் என்பது தெரிந்ததே. மேலும் அவருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  இசையில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது

விக்ரம் ஒரு டீச்சர் மாதிரி: கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவான 'சாமி 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் படக்குழுவினர்

'நரகாசுரன்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

முதல்படமான 'துருவங்கள் 16' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகை வியக்க வைத்தவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் இயக்கிய இரண்டாவது படமான 'நரகாசுரன்

ரஜினிகாந்த் கட்சி தொடங்க மாட்டார்: சொல்வது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக அறிவித்தார். ஆன்மீக அரசியலில் தான் குதிக்கவுள்ளதாகவும்