பிக்பாஸ் தரவரிசை: முதலிடத்திற்கு அடித்து கொள்ளும் இரு போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இறுதிப் போட்டியை நோக்கி நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களை தாங்களே தரவரிசைப்படுத்தி கொள்ள வேண்டும் என பிக்பாஸ் தெரிவிக்கின்றார். இதனை அடுத்து 11 போட்டியாளர்களும் தங்களுக்குரிய இடத்தை தேர்வு செய்யும் பணியில் இருக்கின்றனர்.

என்னைவிட தகுதியானவர்கள் இந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதால் எனக்கு முதலிடம் வேண்டாம் என்று ராஜு முதலிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்துக் கொள்கிறார். அதேபோல் பிரியங்கா இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார். நான்காவது இடத்தில் நான்காவது இடத்தில் அபினய், ஆறாவது இடத்தில் பாவனி மற்றும் ஏழாவது இடத்தில் அமீர் ஆகியோர் பிடித்துக்கொண்டனர். இதனையடுத்து 5, 9 10 11 ஆகிய இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் முதலிடத்திற்கு நான்தான் தகுதியுடையவன் என சிபி அந்த இடத்தைப் பிடித்துக் கொள்கிறார். நிரூப் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ‘நீ சரியாக விளையாடவில்லை என கமல் சாரே சொல்லியிருக்கிறார் என வாதம் செய்ய, ‘எனக்கு நம்பிக்கை இருக்கிறது நான் முதலிடத்திற்கு தகுதியானவன் என்று சிபி ஆவேசமாக கூறுகிறார். இதனை அடுத்து முதலிடத்தை யார் பிடிப்பார்கள் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.