பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் அந்தோணி.. கையில் இத்தனை படங்களா?

  • IndiaGlitz, [Monday,February 19 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரதீப் அந்தோணி தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த பிரதீப் அந்தோணி வலிமையான போட்டியாளராக இருந்த நிலையில் அவருடன் நேரடியாக மோதி வெற்றி பெற முடியாது என்று சதி செய்த சில போட்டியாளர்கள் அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினர்.

இதற்கு கமல்ஹாசனும் தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாக இருந்து விட்டார் என பிக் பாஸ் பார்வையாளர்கள் விமர்சனம் செய்தனர் என்பதும் இந்த நிகழ்வை அடுத்து பிரதீப் அந்தோணிக்கு பார்வையாளர்களின் ஆதரவு குவிந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஏற்கனவே பிரதீப் ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக கதை எழுதி வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்க முன்னணி இயக்குனர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரதீப் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமானதாக கூறப்படும் நிலையில் மூன்று படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து நடைபெறும் என்றும் இந்த ஆண்டுக்குள் மூன்று படங்களும் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

மயில் ஒரு பக்கம், மாடுகள் ஒரு பக்கம்.. இடையில் அமலாபால் செய்யும் வேலையை பாருங்கள்..!

மயில்கள் மற்றும் மாடுகள் இருக்கும் இடத்தில் அமலாபால் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பாட்டி, அம்மா, மகளுடன் நான்.. 4 தலைமுறையினர் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை..!

சூர்யா, கார்த்தி உட்பட சில பிரபலங்களுடன் நடித்த தமிழ் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாட்டி, அம்மா, மகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 4 தலைமுறை பெண்கள்

நள்ளிரவில் ஹீரோ அழைத்து போகவில்லையெனில் படத்தில் இருந்து தூக்கி விடுவார்கள்: 'தசாவதாரம்' நடிகை..!

நள்ளிரவு 3 மணிக்கு ஹீரோ அழைத்தால் கூட அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் அடுத்த நாளே என்னை படத்திலிருந்து தூக்கி விடுவார்கள் என்றும்,

விமான பயணத்தின் போது திடீரென ஏற்பட்ட ஆபத்து.. உயிர் தப்பியது இப்படித்தான்: ராஷ்மிகாவின் புகைப்படம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விமான பயணம் செய்த போது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அப்போது தான் செய்த செயல் குறித்த புகைப்படத்தை அவர் தனது  சமூக வலைதளத்தில்