பிக்பாஸ் நாமினேஷனில் திடீர் திருப்பம்: காயினை பயன்படுத்த அனுமதி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் நடைபெற்றது என்பதும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்தார்கள் என்பது குறித்த முதல் புரமோவை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோவில் நாமினேசன் செய்யப்பட்டவர்கள் விவரத்தை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதன்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற தேர்வானவர்கள் என பாவனி ரெட்டி, இசைவாணி, அபிநய், இமான் அண்ணாச்சி, வருண் மற்றும் பிரியங்கா என அறிவிக்கின்றார். பிரியங்கா தனது பெயரை அறிவித்த உடன் அப்செட் ஆனது அவரது முகத்தில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ’உங்கள் வசம் உள்ள நாணயத்தின் சலுகையை பயன்படுத்தி உங்களை காப்பாற்றிக் கொள்ள ஒரு நபரை தேர்வு செய்து உங்களுக்கு பதிலாக அவரை நாமினேட் செய்யலாம்’ என பிக்பாஸ் அறிவிக்கிறார். இதனை அடுத்து நாணயத்தை கையில் வைத்திருக்கும் இசைவாணி, பாவனி ரெட்டி மற்றும் வருண் ஆகியோர் தங்களை காப்பாற்றிக் கொண்டு, வேறு யாரையாவது நாமினேட் செய்வார்களா? என்பதை அடுத்து வரும் புரமோ அல்லது இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

தாதா சாகேப் பால்கே விருது விழாவில் ரஜினி: வைரல் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பதும் அந்த விருது இன்று அவருக்கு வழங்கப்பட உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 

அபிஷேக் எலிமினேட் ஆக முக்கிய காரணங்கள் என்னென்ன? நெட்டிசன்கள் அலசல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடி அபிஷேக் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தவர் அனைவரும் அறிந்ததே.

இந்த வாரம் நாமினேஷனில் பிரியங்காவிற்கு குறியா?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடைபெறும் என்பதும் அதில் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படும் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் தெரிந்ததே. 

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு? யாருக்கு அதிகம்?

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தற்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் உடன் இணையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்: அதிரடி அறிவிப்பு!

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்று நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த நிலையில் அந்த திரைப்படத்தை வெளியிட ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முன்வந்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.