பிக்பாஸ் 'முகின்' நடிக்கும் முதல் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,September 28 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக ஹரிஷ் கல்யாண், ஆரவ், ரைசா வில்சன் உள்பட ஒரு சிலர் தமிழ் திரையுலகில் தற்போது பிசியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முகின் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது முகின் நடிக்கவுள்ள முதல் படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ’வெப்பம்’ படத்தை இயக்கிய இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் அதில் மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகும் என்றும் குறிப்பிடதக்கது. இந்த படத்தை ஸ்ரீடி புரடொக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்நிறுவனத்தின் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

லோகேஷ் கனகராஜ் படத்தை ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்: பரபரப்பு தகவல்

'மாநகரம்' என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, அந்த படம் கிடைத்த மாபெரும் வெற்றி காரணமாக கார்த்தி நடித்த 'கைதி' என்ற திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

விசாரணையின்போது கதறியழுதாரா தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்

போதைப்பொருள் விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஆகியோர் இந்த விவகாரத்தில்

எஸ்பிபி இறந்தவுடன் மருத்துவமனையில் நடந்தது என்ன? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்பிபி சரண்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திரை உலகையே உலுக்கி உள்ள நிலையில் ஒரு சிலர் எஸ்பிபி குறித்த வதந்தியை பரப்பி வருவது குறித்து எஸ்பிபி சரண்

வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளரின் குடும்பத்தையே கத்தியால் குத்திய நபர்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் உள்பட அவரது குடும்பத்தினரை வாடகைக்கு இருந்த ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

நீயா நானா? என போட்டி போடுவோம்: எஸ்பிபி குறித்து எஸ்.ஜானகி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது நினைவலைகள் குறித்து பல பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளங்கள்