பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்: 55 வயது நடிகரின் திருமணம் குறித்து பிக்பாஸ் காஜல்!

55 வயதான நடிகர் ஒருவர் 25 வயது பெண்ணை திருமணம் செய்த நிலையில் இந்தத் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் ’பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான், உங்களுக்கு ஏன் பொறாமை’ என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்

தமிழ்த் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகர் பப்லு பிரித்திவிராஜ், அதன்பின் முக்கிய கேரக்டர்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மர்மதேசம், வாணி ராணி, ரமணி vs ரமணி உள்பட பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்

இந்த நிலையில் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதும் அந்த குழந்தை ஆட்டிசம் குறைபாடு உடன் இருந்ததால் அவர் மிகுந்த மனக்கவலை தான் இருந்தார் என்று கூறப்படுகிறது. இடையில் ஒரு சில ஆண்டுகள் இவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு தனது மகனை குணப்படுத்தும் முயற்சியில் இருந்தார் என்றும் அதனால் பப்லுவுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் பப்லுவுக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. பப்லுவின் செய்த தொழிலுக்கு உதவியாக இருந்த 25 வயது பெண் ஒருவர் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்த மறுப்போ அல்லது திருமணம் செய்ததை உறுதி செய்தோ பப்லு பகுதி தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ’பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான், இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? பொறாமை பிடித்த உலகம்’ என்று பதிவு செய்துள்ளார்