பிக்பாஸ் ஜூலியின் முதல் படத்தின் ஷாக்கிங் டைட்டில்

  • IndiaGlitz, [Thursday,January 11 2018]

உலகமே திரும்பி பார்க்கும் வகையில் சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழக மக்களிடம் புகழ் பெற்றவர் ஜூலி. இந்த புகழினால் அவருக்கு கமல்ஹாசன் தொகுத்து நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதத்தினால் ஜல்லிக்கட்டின்போது கிடைத்த புகழ் மறைந்து நெகட்டிவ் விமர்சனங்களால் தாக்கப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஜூலி, தற்போது ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஜூலி நாயகியாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் அவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் என்பவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் 'உத்தமி' என்றும் இந்த டைட்டிலை அதிகாரபூர்வமாக வரும் பொங்கல் தினத்தில் அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஜூலியின் முதல் பட டைட்டிலை கேட்டு ஷாக் அடைந்திருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

'நயன்தாரா' பெயரை சொன்னதும் அதிர்ந்த அரங்கம்: அனிருத் ஆச்சரியம்

நேற்று சென்னையில் நடந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அஞ்சனா கேட்ட கேள்விகளுக்கு அனிருத் விக்னேஷ் சிவனாகவும், விக்னேஷ் சிவன் அனிருத்தாகவும் மாறி பதிலளித்தனர்.

என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம்: ரசிகர்கள் முன் பேசிய சூர்யா

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்திய இந்திய விமான பணிப்பெண் கைது

இதுவரை விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விமான பணிப்பெண் ஒருவரே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வைரமுத்து பேச்சால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல பாடகி

கவியரசு வைரமுத்து சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யாரோ வெளி நாட்டவர் எழுதிய கட்டுரை தேவையா? வைரமுத்து விவகாரம் குறித்து விவேக்

சமீபத்தில் ஆண்டாள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவியரசு வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறினார்.