பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணா இவர்? வைரலாகும் சிக்ஸ்பேக் ஸ்டில்!

  • IndiaGlitz, [Friday,November 20 2020]

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மத்தியில் மனம் கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் என்பது தெரிந்ததே. ஹரிஷ் கல்யாண் தான் டைட்டில் பட்டம் வெல்வார் என எதிர்பார்த்தேன் என சமீபத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிக்பாஸ் முதல் சீசனில் இறுதி வரை ஹரிஷ் கல்யாண் அந்த நிகழ்ச்சியில் இருந்தார் என்பதும் நூலிழையில் தான் டைட்டில் பட்டத்தை மிஸ் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதிக திரைப்பட வாய்ப்புகள் பெற்ற மிகச்சிலரில் ஹரிஷ் கல்யாண் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் நடித்த ’பியார் பிரேமா காதல்’ ’தாராள பிரபு’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின என்பதும் தெலுங்கிலும் அவரது படங்கள் ஹிட்டாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தற்போது ’கசடதபற’ மற்றும் ’ஓமணப்பெண்ணே’ ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இவற்றில் ’ஓமணப்பெண்ணே’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைத்தளத்தில் அட்டகாசமான சிக்ஸ்பேக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். உடற்பயிற்சி கூடத்தில் உட்கார்ந்து இருக்கும் இந்த அட்டகாசமான புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரொமான்ஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த ஹரிஷ் கல்யாண் தற்போது ஆக்சன் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும் அதற்காகத்தான் இந்த சிக்ஸ்பேக் என்றும் கூறப்படுகிறது.

More News

உலகிலேயே முதல் முறையாக பேசும் புத்தகங்கள்… அசத்தும் புது முயற்சி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உலகிலேயே முதல் முறையாகப் பேசும் புத்தகம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது: சாலை மறியலால் பரபரப்பு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன 

'தல' மனைவியின் பிறந்த நாள் விழாவில் கணவருடன் கலந்து கொண்ட சானியா மிர்சா!

தல தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி தனது 32வது பிறந்த நாளை துபாயில் கொண்டாடியுள்ள நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் பிரபல விளையாட்டு வீராங்கனை தனது கணவருடன் கலந்து

சூரரை போற்று: அதிருப்தி அடைந்த நண்பர்களுக்கு ஜிஆர் கோபிநாத் விளக்கம்!

சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகிய சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே இந்த படத்தை ஜிஆர் கோபிநாத் அவர்கள் தனது சமூக

மன்றாடிக் கேட்கின்றோம், மனது வையுங்கள்: இயக்குனர் இமயம் வேண்டுகோள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாயார் 30 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்