கொரோனா பாதிப்புடன் படப்பிடிப்புக்கு சென்ற பிக்பாஸ் பிரபலம்: எஃப்.ஐ.ஆர் பதிவு

  • IndiaGlitz, [Tuesday,March 16 2021]

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் ஒருவர் படப்பிடிப்புக்கு சென்றதை அடுத்து அவர் மீது காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 7 வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை கவுஹர் கான். மும்பையில் வசித்து வரும் இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தி இருந்தனர்.

ஆனால் கொரோனா விதிமுறைகளை மீறி இவர் படப்பிடிப்புக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இதனைஅடுத்து அவர் மீது கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்திருந்தும் படப்பிடிப்புக்கு சென்ற அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.