செல்ல நாய்க்கு பிறந்த நாள் கேக் ஊட்டிய கேப்ரில்லா: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து அதன் பின்னர் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வார் என்பதும் அவரது பதிவுகளுக்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ல நாய் குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார். செல்லமாக தான் வளர்த்து வரும் நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கேக் வெட்டி, அதை நாய்க்கு ஊட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள் எறியட்டும்: வைரமுத்து விருது சர்ச்சை குறித்து பாரதிராஜா!

சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒன்.என்.வி என்ற விருது அறிவிக்கப்பட்டது. அதன்பின் திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பிய எதிர்ப்பு காரணமாக அந்த விருது வைரமுத்துவுக்கு

நயன்தாரா படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ்சிவன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை அடுத்து அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது 

ரூ.3 கோடி முதல் ரூ.30 லட்சம் வரை: நடிகை சாந்தினி கும்பல் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம்!

தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை சாந்தினியை யார் என்றே தெரியாது என்றும், அவரை நான் பார்த்ததே இல்லை என்றும் அவரது கும்பல் தன்னிடம் ரூபாய் 3 கோடி வரை கேட்டு மிரட்டியதாகவும்

கொரோனாவுக்கு பலியான தமிழ் நடிகர்-தயாரிப்பாளர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து காலமாகி வருவது திரையுலகினர்க்ளை மட்டுமின்றி ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ஒரு குடும்பத்தில் 6 பேரை காவு வாங்கிய கொரோனா...! மனதை உருக்கும் சோக நிகழ்வு.....!

திருப்பூரில் தன் நான்கு மகன்கள் இறந்ததை கேட்டு, அவர்களின் தாயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.