எனக்கு தடை நீங்க தான்.. நான் செஞ்சது புல்லின்னா நீங்க செஞ்சதும் அதுதான்: பிக்பாஸை குறை சொன்ன போட்டியாளர்..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

பிக் பாஸ் தான் எனக்கு தடையானவர், நான் மற்றவர்களுக்கு செஞ்சது புல்லி என்றால் நீங்கள் எனக்கு செய்தது புல்லி என போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் மீது குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் பலவிதமான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ’நீங்கள் பிக் பாஸ் டைட்டில் பட்டம் வென்றால் உங்கள் வெற்றிக்கு சாதகமாக இருந்தது யார்? தடையாக இருந்தது யார்? என இருவரை கூற வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்பட்டது.

அப்போது பூர்ணிமா பேச வந்த போது ’எனது வெற்றிக்கு சாதகமாக இருந்தது மாயா தான், எனக்கு 50 லட்சம் பரிசு கிடைத்தால் அதை அவருக்கு கொடுத்து விடுவேன்' என்று தெரிவித்தார். மேலும் ’எனக்கு தடையாக இருந்தது பிக் பாஸ் தான்’ என்று கூற சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

‘நான் விக்ரமுக்கு காக்ரோச் என்ற பட்டம் கொடுத்தது தவறுதான், அதற்காக நான் மன்னிப்பு கேட்டு விட்டேன், ஆனால் எனக்கு விருப்பமே இல்லாமல், எனக்கு தவளை என்ற டேக் கொடுத்தது பிக் பாஸ் தான், அனன்யா எனக்கு அதை கொடுத்தாலும் அதற்கு நீங்கள் தான் காரணம். அதை நான் இரண்டு நாள் என் தலையில் விருப்பமின்றி வைத்திருந்தேன். அப்போது நான் மிகவும் அசெளகரியமாக உணர்ந்தேன். இதுபோல் பலமுறை நான் நோகடிக்கப்பட்டேன்

நான் இந்த வீட்டில் பூமர் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று நினைத்திருந்தேன், ஆனால் நீங்களே பூமர் அங்கிள் என்ற ஒரு டேக்கை கொடுத்து அனுப்பி விட்டீர்கள். நான் மற்றவர்களுக்கு செய்தது புல்லி என்றால். நீங்கள் எனக்கு செய்தது புல்லி தான், அதனால் எனக்கு மற்றவர்களை விட நீங்கள் தான் அதிகமாக தடையாக இருந்தீர்கள், ஆனால் அந்த தடையையும் மீறி நான் டைட்டில் பட்டம் வென்றுள்ளேன்’ என பிக் பாஸ் இடம் நேரடியாகவே அவர் தனது புகாரை தெரிவித்தார்,.

பூர்ணிமா இவ்வாறு பேசி முடித்தவுடன் விசித்ரா எழுந்து அவரை கட்டிப்பிடித்து ’நீ சொன்னது எல்லாமே சரிதான், மிகவும் தைரியமான பெண்’ என்று வாழ்த்து கூறினார்.

More News

நகைச்சுவை நடிகர் பெற்ற மூன்றாவது இளங்கலை பட்டம்: ரசிகர்கள் வாழ்த்து..!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே 3.21 மணி நேர ரன்னிங் டைம்.. ஓடிடியில் இன்னும் அதிகம் என அறிவிப்பு.. எந்த படம்?

 திரையரங்குகளில் வெளியாகும் போது 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ரன்னிங் டைமாக இருந்த படம் ஓடிடியில் இன்னும் அதிக நேரம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரவிந்த்சாமிக்கு மட்டும் தானா, எனக்கும் மரியாதை தர வேண்டும்.. ரசிகரின் பதிவுக்கு மோகன்ராஜா பதில்..!

 தமிழ் திரையுலகின் புத்திசாலித்தனமான வில்லன் கேரக்டர் 'தனி ஒருவன்' படத்தில் நடித்த அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யு  கேரக்டர் என்று ரசிகர் ஒருவர் செய்த பதிவுக்கு அந்த கேரக்டரை

போண்டாமணி குடும்பத்திற்கு முதல் நபராக நிதியுதவி செய்த விஜயகாந்த்.. எவ்வளவு தெரியுமா?..

காமெடி நடிகர் போண்டா மணி நேற்று காலமானதை அடுத்து அவரது குடும்பத்திற்கு முதல் நபராக கேப்டன் விஜயகாந்த் நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 5 பேர்.. தப்பித்த பூர்ணிமா, அர்ச்சனா..!

ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஓப்பன் நாமினேஷன் நடந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையி