பணப்பெட்டியை எடுத்தவுடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட போட்டியாளர்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,January 05 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்ட நிலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடன் தொடங்கிய பணப்பெட்டியின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோ வீடியோவில் 16 லட்ச ரூபாய் மதிப்பு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியாளர் ஒருவர் அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சக போட்டியாளார்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது 8 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறலாம் என்ற வாய்ப்பு அளிக்கப்பட்டது. நேற்று 12 லட்சம் பணப்பெட்டியின் மதிப்பு இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு 16 லட்சம் என மாறி உள்ளது.

இதனை அடுத்து பணப்பெட்டியை எடுத்து செல்லலாமா என்று ஆழ்ந்த யோசனையில் இருந்த பூர்ணிமா 16 லட்சம் என்றவுடன் உடனே பணப்பெட்டியை எடுக்க முடிவு செய்துவிட்டார். நான் பணப்பெட்டியை எடுத்து கிளம்புகிறேன் என்று பூர்ணிமா அறிவித்த நிலையில் அவர் மற்ற போட்டியாளர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன் அவர் சக போட்டியாளர்களிடம் பேசியபோது ’முதலில் நான் உங்களை இதுநாள் வரை அட்டாக் செய்வதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என அனைவர் முன்னிலையிலும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதையடுத்து ‘காசு மேல காசு வந்து’ என்ற பாடலுக்கு நடனமாடி மாயாவுக்கு ஒரு அன்பு முத்தம் கொடுத்து பூர்ணிமா வெளியேறியதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

More News

அவமானமா இருக்கு, தோல்வியை ஏத்துக்கிட முடியல.. அப்ப பெட்டிய  எடுத்துட்டு போயிரு.. யார் யாரின் உரையாடல்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்பது கிட்டத்தட்ட  பார்வையாளர்கள் மட்டுமின்றி உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் முடிவு செய்துவிட்டனர்.

சரமாரியான கெட்ட வார்த்தை.. கத்தரி வைத்த சென்சார்.. 'கேப்டன் மில்லர்' ஃபைனல் ரன்னிங் டைம்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் சற்று முன் வெளியாகி உள்ளன.

15 வருடங்களுக்கு பின் உருவாகும் 'மாயாண்டி குடும்பத்தார் 2': விஜய் பட இயக்குனரின் மாஸ் திட்டம்..!

'மாயாண்டி குடும்பத்தார்' என்ற திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 15 ஆண்டுகள் கழித்து இந்த  படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விஜய்

சிறகடிக்க ஆசை: சொந்த தொழில் ஆரம்பித்த மீனா.. ஊக்குவிக்கும் முத்து.. எரிச்சலில் விஜயா.. இனி என்ன நடக்கும்?

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பார்வையாளர்கள் மத்தியில் பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியலில் திடீர் திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

விசித்ரா - அர்ச்சனா திடீர் மோதல்.. சமாதானப்படுத்த முயற்சி செய்யும் மாயா.. என்ன நடந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவு என்பது சாதாரணம் என்றாலும் இந்த சீசனில் சண்டை வராத நாளை இல்லை என்று கூறலாம். குறிப்பாக அர்ச்சனா  கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்டுவிட்டார்