24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. கண்ணீருடன் விடை பெற்றார்..!

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த போட்டியாளர் கண்ணீருடன் வெளியேறியது பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களிலும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்தே முதல் எலிமினேஷன் நடக்கும் என்ற நிலையில், இந்த சீசனில் 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாமினேஷன் படலம் தொடங்கிய நிலையில், அதிக நபர்கள் நாமினேஷன் செய்யப்பட்டதன் அடிப்படையில் சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார் என்று பிக் பாஸ் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சாச்சனா மிகவும் வருத்தத்துடன், கண்ணீருடன் தனது பிக் பாஸ் சின்னத்தையும் உடைத்து விட்டு வெளியேறினார். அவரது வெளியேற்றம் சக போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய நிகழ்ச்சிகளில், இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்த சாச்சனா, தனது அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் கூறியிருந்தார். அவருடைய பெர்பார்மன்ஸை காணும் முன்பே அவரை வெளியேற்றியது மிகப்பெரிய அநியாயம் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

2வது திருமணம் செய்த சீரியல் நடிகை கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில்

மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட பலி.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நிகழ்ந்த நிலையில் அதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'மகாராஜா' வெற்றிக்காக இயக்குனர் நிதிலனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.. வைரல் புகைப்படம்..!

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தற்போது மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது

'மெய்யழகன்' இயக்குனர் பிரேம்குமாரின் அடுத்த படம்.. ஆச்சரியம் அடைந்த கார்த்தி..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96', கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த 'மெய்யழகன்' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ள நிலையில், இரண்டு படங்களுமே

யாரும் எதிர்பாராத டிவிஸ்ட்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த குக் வித் கோமாளி ஸ்ருதிகா..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்று தொடங்கியது. இந்நிலையில், நேற்று தான் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18 தொடங்கியது என்பதும், இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி