பெண் போட்டியாளரை ஜெயிலுக்கு அனுப்பிய கேப்டன் பூர்ணிமா.. பிரதீப் எப்படி தப்பித்தார்?

  • IndiaGlitz, [Friday,November 03 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் இன்று ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதாக ப்ரோமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 32 நாள் முடிவடைந்த நிலையில் இன்று 33 வது நாள் ஒளிபரப்பாக உள்ளது. ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கிறார்

இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்தவர்கள் ஜெயிலுக்கு தள்ளப்படுவார்கள் என கேப்டன் பிக்பாஸ் அறிவித்த நிலையில் விஷ்ணு, கூல் சுரேஷ் உட்பட பலரும் இந்த டாஸ்க்கில் கலந்து கொள்கின்றனர். டாஸ்க்கின் இறுதியில் ஜெயிலுக்கு செல்வது யார் என்பது குறித்து கேப்டன் பூர்ணிமா கூறியபோது, அக்சயாவை ஜெயிலுக்கு அனுப்புவதாக முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

இதனை அடுத்து அக்சயாவை ஜெயிலுக்குள் தள்ளுகின்றனர். அக்சயாவை பார்க்காமல் நிக்சன் என்ன செய்வார்? எல்லோரையும் பகைத்துக் கொள்ளும் பிரதீப் ஜெயிலுக்கு செல்லாமல் தப்பித்தது எப்படி? என்பதை இன்றைய எபிசோடில் பொறுத்திருந்துதான் பார்ப்போம்.