பிக்பாஸ் பாலாஜி வீட்டில் நிகழ்ந்த சோகம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Tuesday,February 02 2021]

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்து 105வது நாள் வரை சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டவர் பாலாஜி முருகதாஸ். அனேகமாக அவர் சண்டை போடாத சக போட்டியாளர்களே இல்லை என்று கூறலாம்

இருப்பினும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருந்ததால் ஆரிக்கு அடுத்த இடத்தை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழின் அடிப்படையில் பாலாஜி முருகதாசுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென அவரது வீட்டில் ஒரு மிகப்பெரிய சோகம் நிகழ்ந்து உள்ளது. பிக்பாஸ் பாலாஜியின் தந்தை சற்றுமுன்னர் காலமானதாக அவரது சகோதரர் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். பாலாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இதுவும் கடந்து போகும்’ என்று சோகமாக பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து பாலாஜியின் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா சம்பத்தின் தந்தை காலமான நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸின் தந்தையும் காலமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது