பிரியங்காவை மெயின் டோர் வழியாக வெளியே வரச்சொன்ன பிக்பாஸ்: என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது என்பதும் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி 100 வது நாளாக நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஐந்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர் என்பதும் வரும் ஞாயிறன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இவர்களில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி டாஸ்க்காக ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை பிக்பாஸ் போல நினைத்துக்கொண்டு நடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பிரியங்கா பிக்பாஸ் போல நடிக்கும் காட்சிகள் இன்றைய புரமோவில் உள்ளன.

பிரியங்காவை அடுத்து நிரூப், ராஜு ஆகியோரும் பிக்பாஸ் போல நடிக்கின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் போல நடிக்கும் ஒருவர் ’பிரியங்கா இப்போது மெயின் டோர் வழியாக வெளியே வாங்க என்று அறிவிப்பதை கேட்டு பிரியங்கா உள்பட சக போட்டியாளர்கள் சிரிக்கும் காட்சிகளுடன் என்ற முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.