பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா-ஜூலி இணைந்து நடிக்கும் பயங்கர கேம் திரைப்படம்!

  • IndiaGlitz, [Friday,August 16 2019]

பிக்பாஸ் முதல் சிசனில் கலந்து கொண்ட ஜூலியும், பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து ஒரு பயங்கரமான கேம் படத்தில் நடிக்கின்றனர். பப்ஜி கேம் குறித்த திரைப்படமான இந்த படத்திற்கு 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தாதா 87, பிட்ரூ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஐஸ்வர்யா தத்தா, ஜூலி உள்பட ஐந்து நாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் பப்ஜி என்ற கேரக்டரில் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு . அந்த பரிசு என்ன? இந்த கேம் காரணமாக அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த படத்தில் திரையில நடிக்காம ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது' என்று கூறினார்

இவர் ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற்றும் ஐனகராஜ் அவர்களையும் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகர் அம்சவர்தனை வைத்து பீட்ரு என்ற படம் இயக்கிவருகிறார் என்பதும் அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் சமுத்திரக்கனி! என்ன கேரக்டர்?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது

'பிகில்' இசை வெளியீடு குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து

கேப்டனாகிவிட்டார் மதுமிதா! கவின் கோஷ்டிக்கு இரண்டு வாரம் ஏழரையா?

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா திடீரென பெண்களுக்கு ஆதரவாக பொங்குவதும், ஆண்கள் மீது குற்றஞ்சாட்டுவதும் செயற்கையாக இருந்து வரும் நிலையில்

கஸ்தூரி வேலைக்கு ஆகாது! மீண்டும் கலாய்க்கும் கவின்

பிக்பாஸ் வீட்டில் வனிதா நுழைந்தவுடன் வீடே இரண்டு அணிகள் ஆனது என்பது தெரிந்ததே. ஆண்கள் அணியில் லாஸ்லியாவும், பெண்கள் அணியும் சேரனும் இருக்கும் நிலையில்

இப்படிப்பட்ட சரவணனையா வெளியே அனுப்பினார்கள்? நெட்டிசன்கள் ஆதங்கம்!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், தனது கல்லூரி காலத்தில் நடந்த ஒரு ஜாலியான சம்பவத்தை கூறியதால் அநியாயமாக வெளியேற்றப்பட்டார்.