நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்.. பிக்பாஸ் நடிகையின் சாட்டையடி பதிவு!

நடிகை நயன்தாரா சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த பின் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்று தான் இந்த முடிவை எடுத்திருப்பார்கள். ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க இது குறித்த கேள்விகளே அதிகம் அமைச்சரிடம் கூட கேட்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த விவகாரத்தை வைத்து யூடியூபில் பலர் வீடியோக்கள் வெளியிட்டு பணம் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டனர். ஒருசில ஊடகங்களும் இந்த செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் நயன்தாரா விவகாரம் குறித்து குற்றம் சாட்டி பதிவு செய்து வருபவர்களுக்கு பிக்பாஸ் நடிகை ரேஷ்மா தனது டுவிட்டர் பக்கத்தில் சாட்டையடி பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியபோது, ‘இந்த உலகில் அடுத்தவர்களுக்காக யாரும் சந்தோஷப்படுவது இல்லை, ஆனால் அடுத்தவர்களை குற்றம் சாட்டுவது, அதன்மூலம் சந்தோஷப்படுவது, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பம் காணுவது ஆகிய கொடூரம் தான் தற்போதைய உலகில் நடைபெறுகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்

நடிகை ரேஷ்மா யாருடைய பெயரையும் தனது பதிவில் குறிப்பிடவில்லை என்றாலும் நயன்தாராவை விமர்சனம் செய்தவர்களுக்கு தான் மறைமுகமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் ரேஷ்மாவின் இந்த பதிவிற்கு நடிகை வனிதா விஜயகுமார் ’ரேஷ்மா கூறியது மிகவும் சரியானது’ என்று கூறி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

More News

'பாண்டவர் இல்லம்' நடிகைக்கு நடந்த வளைகாப்பு.. அழகிய புகைப்படங்கள்!

'பாண்டவர் இல்லம்' என்ற சீரியலில் நடித்த நடிகை சமீபத்தில் கர்ப்பமான நிலையில் ஐந்தாவது மாதத்தில் நடந்த வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில்

சத்யாவை திட்டமிட்டே கொலை செய்தேன்: சதீஷின் அதிர்ச்சி வாக்குமூலம்

 கல்லூரி மாணவி சத்யாவை இரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் வாக்குமூலம் கொடுத்த நிலையில் அந்த வாக்குமூலத்தில் தற்செயலாக இந்த கொலை சம்பவம் நடைபெறவில்லை என்றும் திட்டமிட்டே கொலை

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் தந்தையும் மரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

பரங்கிமலையில் நேற்று கல்லூரி மாணவி சத்யாவை, கல்லூரி மாணவர் சதீஷ் என்பவர் ஒருதலையாக காதலித்த நிலையில் திடீரென ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொங்கல் விருந்தாக  'துணிவு' - 'வாரிசு' ரிலீஸ்: பிரபலம் அளித்த உறுதியான தகவல்!

 ஒரே நாளில் அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆவது உண்மைதான் என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்கள்: குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல சீரியல் நடிகை தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.