கவின் இல்லைனா முகின்: வடிவேல் பாணியில் அபிராமி

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே தனக்கு கவின் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாகவும், விரைவில் தனது காதலை கவினிடம் சொல்லவிருப்பதாகவும் அபிராமி கூறினார். ஆனால் இதை கேள்விப்பட்ட கவின் இந்த பிரச்சனையை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று முடிவு செய்து தனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை, இங்குள்ள எல்லோரையும் நான் நண்பர்களாகத்தான் பார்க்கின்றேன். அதுபோல் தான் உன்னையும் என்று தெளிவாக கூறிவிட்டார். இதனால் சற்றே அதிர்ச்சி அடைந்த அபிராமி கவினை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே முகினுடன் நெருக்கமாக இருப்பது போன்று நடித்தார்.

முகின் -அபிராமி குறித்து தேவையில்லாத கமெண்ட் ஒன்றை அடித்த மதுமிதாவுக்கு ஏற்பட்ட சிக்கல் என்ன என்பதை இரண்டு நாட்களாக பார்த்து வந்தோம். இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் அபிராமி தனது சக போட்டியாளர்களிடம் சற்று ஆங்காரமாகவே முகினுடன் தனக்கு இருக்கும் உறவு குறித்து கூறுகிறார்.

முகின் குறித்து யாருக்கும் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முகின் எனது நண்பர், இதனால் யாருக்காவது பிரச்சனை இருந்தால் அதை உங்களோட வச்சுக்கோங்க. நான் ஒருவேளை அவனை லவ் பண்ணினால் லவ் பண்றேன்னு அவன் மூஞ்சியை பார்த்து சொல்வேன். எங்களுக்குள்ள பிரச்சனை வந்தா நாங்க பார்த்துக்கிறோம். இந்த பிரச்சனையை சால்வ் பண்ண யாரும் வரவேண்டாம். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் கண்ணை மூடிக்கோங்க' என்று ஆத்திரமாக கூறி சென்றுவிட்டார்.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவெனில் சம்பந்தப்பட்ட முகின் ஒரு வார்த்தை கூட பேசாமல் பரிதாபமாக இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததுதான்.

'கவின் இல்லாட்டி முகின்' என்ற அபிராமியின் இந்த பேச்சு வடிவேல் பாணியில் காதலை மாற்றும் காட்சி தான் ஞாபகம் வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
 

More News

மீராவுக்கு முத்தம் கொடுத்த மோகன் வைத்யா! நெட்டிசன்கள் கிண்டல்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மிராமினுதுக்கு மோகன்வைத்யா லிப்கிஸ் கொடுத்தது நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

லாஸ்லியாவை கரெக்ட் செய்ய கவின் பாடிய கவிதை!

பிக்பாஸ் வீட்டில் காதல் இளவரசனாக வலம் வந்து கொண்டிருக்கும் கவினை எப்போது நான்கு பெண்கள் சுற்றி வந்து கொண்டிருக்கும் நிலையில்

ஜூன் மாதத்தில் அதிக வசூல் செய்த படம் 'மெர்சல்': ஒரு ஆச்சரிய தகவல்

சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கம் ஒன்றில் கடந்த மாதம் அதாவது ஜூன் மாதம் மொத்தம் 19 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் 11 திரைப்படங்கள் பெரிய ஸ்க்ரீனில் திரையிடப்பட்டன.

லைகா நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தற்போது ரஜினியின் 'தர்பார்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயனின் 17வது படம்

இன்று நேற்று நாளை 2' படத்தின் நாயகன் அறிவிப்பு

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாகவும் மியா நாயகியாகவும்  நடித்திருந்தனர்.