பிக்பாஸ் இல்லத்தில் மோதலின் தொடக்கம்!

  • IndiaGlitz, [Tuesday,June 19 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சிறுசிறு மோதல்கள் நடந்தாலும் அந்த மோதல் பெரிய அளவில் இல்லை. மும்தாஜை பார்த்து பொன்னம்பலம் 'மல மல என்ற பாட்டை பாடியது, செண்ட்ராயனை மும்தாஜ் பெண்களின் துணிகளை தொடக்கூடாது என்று கண்டித்தது, ஐஸ்வர்யா பேசி கொண்டிருந்தபோது பாலாஜி கமெண்ட் அடித்தது போன்ற சின்ன சின்ன மோதல்கள் மட்டுமே இதுவரை நடந்துள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் போட்டியாளர்களுக்கு ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் நீங்கள் அதிகம் வெறுக்கும் நபர் யார்? விரும்பும் நபர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாளர்கள் பதில் கூறும்போது நிச்சயம் மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதலை ஆரம்பித்து வைத்த பிக்பாஸூக்கு யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் நன்றி கூறுவதை பார்க்கும்போது இருவரும் ஏதோ திட்டத்தில் உள்ளனர் என்பதும் தெரியவருகிறது.

இந்த டாஸ்க்கால் பாலாஜி, நித்யாவுக்கு இடையிலும், மும்தாஜூக்கும் ஒருசிலருக்கும் இடையிலும் மோதல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் மோதல் வந்தால்தான் நிகழ்ச்சியும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று பார்வையாளர்களும் எதிர்பார்க்கின்றனர் என்ற உண்மையையும் இங்கு சொல்லியாக வேண்டியுள்ளது

More News

ஜிவி பிரகாஷ் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குப்பத்து ராஜா' திரைப்படம் வெகுவிரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று சென்னை கடற்கரையை சுத்தம் செய்தனர்

'சீமராஜா' சிவகார்த்திகேயனுக்கு இன்று பிரிவு உபச்சார விழா

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது.

பிக்பாஸ் 2: பைனல்ஸ்க்கு நாம ரெண்டு பேரும்தான்: சொல்பவர் யார் தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் அதன் புரமோ வீடியோ இருந்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில்

பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை: கணவர் காரணமா?

கடந்த சில மாதங்களாக சின்னத்திரை கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாகி வரும் நிலையில் நேற்று தெலுங்கு சின்னத்திரையை சேர்ந்த தேஜஸ்வனி என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து

பிக்பாஸ் 2: ஒருசில மணி நேரத்தில் வெளியேறிய ஓவியா: காரணம் இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுக்கு பின்னர் 17வது நபராக சிறப்பு விருந்தினராக ஓவியா உள்ளே அனுப்பப்பட்டார்