சூடு பிடிக்கும் பிக்பாஸ்.. மீண்டும் ஓப்பன் நாமினேஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் முடிந்து 71வது நாள் இன்று நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அதில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு போட்டியாளர்களை நாமினேஷன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.

பெரும்பாலும் போட்டியாளர்கள் கன்பெக்சன் அறைக்கு சென்று தான் நாமினேஷன் செய்யும் நிலையில் இந்த சீசனில் ஒரே ஒரு முறை மட்டுமே ஓபன் நாமினேஷன் நடந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஓபன் நடைபெறுவதாக முதல் புரமோவில் இருந்து தெரியவந்துள்ளது.

நாமினேஷன் செய்பவர்கள் இரண்டு பேரை தேர்வு செய்து அவர்களது கன்னத்தில் சிவப்பு மையால் குறியிட வேண்டுமென பிக்பாஸ் கூறியதையடுத்து ஒவ்வொரு போட்டியாளராக நாமினேஷன் செய்கின்றனர்.

மணிகண்டன் ஷிவினை நமைனேஷன் செய்து ’ரொம்ப நன்றாக கேம் விளையாடி வருவதாக அவர்கள் நினைத்து வருகிறார்கள் என்றும் அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதனையடுத்து விக்ரமன் தனலட்சுமியை நாமினேஷன் செய்து தனலட்சுமி மிகவும் அராஜகமாக விளையாடி வருகிறார் என்றும் என்று கூறுகிறார். அதேபோல் ஏடிகேவும் தனலட்சுமியை நாமினேஷன் செய்து நான் மட்டுமே விளையாட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனலட்சுமி விளையாடி வருகிறார் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து ஷிவனி, ரக்சிதா ஆகிய இருவரும் அசீமை நாமினேசன் செய்து அதற்கான காரணத்தை கூறுகின்ற்னார். அதன்பின் மைனாவை நாமினேஷன் செய்யும் அமுதவாணன் அதற்கான காரணத்தை சொல்லும் போது மைனா குறுக்கிட்டு அந்த காரணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.

மொத்தத்தில் இன்றைய ஓபன் நாமினேஷனில் பரபரப்பான காட்சிகள் இடம்பெறும் என்று தெரியவருகிறது.