இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே.. நீதிமன்ற டாஸ்க்கை கலாய்த்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்ற நிலையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதும், போட்டியாளர்கள் குற்றவாளிகளாகவும், வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் நடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நீதிமன்ற டாஸ்க்கை பல போட்டியாளர்கள் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் காமெடியாக நடந்து கொண்டனர் என்பதும் நீதிபதி என்ற மாண்பையே குலைக்கும் வகையில் சில போட்டியாளர்கள் நடந்து கொண்டனர் என்பதும் பார்வையாளர்களின் விமர்சனமாக உள்ளது.

கண்டிப்பாக இந்த டாஸ்க் குறித்து கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் கமலஹாசன் கூறியதாவது:

நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது, சில மனிதர்களையும் சந்தித்துள்ளது. ஆனால் இந்த விசித்திரமான வழக்குகளில் குற்றம் செய்தவர் யார் என்றே தெரியாமல் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றம் செய்தவர் யார் என்பது நிஜமாகவே தெரியாதா? அல்லது தெரிவிக்க விரும்பவில்லையா? இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே! இவர்களை என்ன செய்யலாம்’ என்று கமல்ஹாசன் கலாய்க்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.