சின்ன வயசில் இருந்து அம்மா-அப்பா சிரிச்சு நான் பார்த்ததே இல்லை: பிக்பாஸ் வீட்டில் செண்டிமெண்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 72வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது நர்சரி பள்ளிக்கூடம் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்றும் இந்த டாஸ்க் கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திடீரென பிக் பாஸ் வீட்டில் சென்டிமெண்ட் காட்சிகள் நடைபெறுகின்றன. சற்று முன் வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் போட்டியாளர்கள் தங்களுடைய அம்மா அப்பா குறித்து தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஏடிகே தனது அம்மா அப்பா குறித்து கூறிய போது இதுவரைக்கும் நான் என்ன செய்கிறேன், எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று என்னை எங்கள் அம்மா அப்பா கேட்டதே இல்லை என்று கூறினார்.

அதேபோல் விக்ரமன் கூறியபோது, ‘நான் கஷ்டப்படாமல் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அப்பா தான் என்றும், அவர் இல்லாமல் நான் இல்லை என்றும், அவருக்கு நான் இதுவரை நன்றி சொல்லவில்லை, இந்த சந்தர்ப்பத்தில் நன்றி சொல்கிறேன் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து பேசிய மைனா சற்று கண் கலங்கியபடி, ‘என் சின்ன வயசில் இருந்து அம்மா அப்பா சண்டை போட்டு தான் நான் பார்த்துக்கிறேன். ஒரு நாள் கூட அவர்கள் இருவரும் சிரித்து பேசியதை நான் பார்த்ததே இல்லை’ என்று கூறுகிறார். இதனை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் சென்டிமென்டில் மூழ்கி உள்ளது தெரியவருகிறது.