பிக்பாஸ் வின்னர் யார்? கடுப்புடன் கணித்த நமீதா

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தபோதிலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் பார்க்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி பிரபலம் ஆகிவிட்டது.
இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஐந்து பேர் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் தற்போது இன்னும் பத்து பேர் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவர் இந்த நிகழ்ச்சியின் வின்னர் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பது குறித்து சற்று கடுப்புடன் நமீதா புலம்புவதை இன்றைய புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர். நமீதா ரைசாவிடம், 'நாம் வின்னராக வரமுடியாது. ஆடியன்ஸ்களுக்கு நம்மள மாதிரி ஆட்களை பிடிக்காது. ஜூலி போல் ஒரு முழு போலி, அல்லது ஓவியா போல் ஒரு முழு ஆக்டிங் திறன் உள்ளவர்களைத்தான் பிடிக்கும்' என்று கூறினார். மேலும் ஜூலி வின்னராக வந்தால் 'சரியில்லை, பட் ஓகே' என்று நமீதா கூறியுள்ளார்.
நமீதாவின் இந்த பேச்சை வைத்து பார்க்கும்போது இன்று ஒரு புயல் காத்திருப்பது போன்று தோன்றுகிறது.

More News

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆதரவு

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியபோது அவர் தமிழ்ப்பாடல் மட்டுமே பாடியதாக குற்றம் சாட்டி லண்டன்வாழ் வட இந்திய ரசிகர்கள் நிகழ்ச்சி முடியும் முன்பே வெளியேறியதாக செய்திகள் வெளிவந்தது.

ஒரே படத்தில் உச்சத்தை தொட சிம்புவுக்கு அரிய வாய்ப்பு

சிம்பு நடித்த 'AAA' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து அவர் சேர்த்து வைத்திருந்த இத்தனை ஆண்டுகால நல்ல பெயரை ஒரே படம் தகர்த்தெறிந்துவிட்டது.

பிக்பாஸ் ஆர்த்தியின் முதல் டுவீட்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்.

சசிகலாவின் சலுகைகளை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் டிரான்ஸ்ஃபர்

சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிறைத்துறை மேலதிகாரிகள் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சுமத்தியிருந்தார்...

அஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு ஏன் இல்லை? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அதிமுக அரசு மீது கடுமையான விமர்சனம் செய்து வருவதும், அதற்கு தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையும் இருந்து வருகிறது.