மீராவுக்கு முத்தம் கொடுத்த மோகன் வைத்யா! நெட்டிசன்கள் கிண்டல்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மிராமினுதுக்கு மோகன்வைத்யா முத்தம்  கொடுத்தது நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நேற்றைய டாஸ்க் ஒன்றில் தர்ஷன் மற்றும் சாக்சி விளையாட அந்த டாஸ்க்கிற்கு யாரும் உதவி செய்யக்கூடாது என்று விதி இருந்தும், விதியை மீறி மீராமிதுன் மறைமுகமாக உதவி செய்தார். இதனையடுத்து கவினுக்கும் மீராவுக்கும் பிரச்சனை வந்தது. மீராவை கவின் 'அறிவிருக்கா' என்று கேட்க இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. ஆளாளுக்கு மீராவுக்கு அட்வைஸ் செய்தனர். அவ்வாறு அட்வைஸ் செய்தவர்களில் ஒருவர் மோகன் வைத்யா.

இந்த நிலையில் தன்னை எல்லோரும் திட்டுகிறார்கள் என்று கூறி மீரா புலம்ப, மீண்டும் மோகன் வைத்யா கொஞ்சம் கடுமையாக மீராவை திட்டினார். இதனால் முதல்முறையாக அதிர்ச்சி அடைந்த மீரா, வழக்கம்போல் தனது அழுகை நாடகத்தை தொடங்கினார். அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் தர்ஷன் மீராவை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தினார்.

மீரா தன்னால்தான் அழுவதாக நினைத்து கொண்டு அங்கு வந்த மோகன் வைத்யா, மீராவை சமாதானப்படுத்தினார். நீ எனக்கு மகள் போன்றவர், உன்னை நான் திட்டவே இல்லை, மகளாக நினைத்து அறிவுரை மட்டுமே கூறினேன் என்று சொல்லி கொண்டே வந்தவர் திடீரென மிராவை கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் ஒன்றையும் கொடுத்தார். இந்த முத்ததால் மீரா கூட அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் அவரது பக்கத்தில் இருந்த சாண்டி அதிர்ச்சி அடைந்தார். தர்ஷனும் தர்மசங்கடத்தில் நெளிந்தார்.

இந்த விவகாரத்தை வைத்து நெட்டிசன்கள் இஷ்டத்திற்கு கிண்டல் செய்து வருகின்றனர். எந்த அப்பா, தன்னுடைய மகளுக்கு முத்தம் கொடுப்பார். மோகன் வைத்யா இதெல்லாம் ஓவர் என கூறி வருகின்றனர். 

More News

லாஸ்லியாவை கரெக்ட் செய்ய கவின் பாடிய கவிதை!

பிக்பாஸ் வீட்டில் காதல் இளவரசனாக வலம் வந்து கொண்டிருக்கும் கவினை எப்போது நான்கு பெண்கள் சுற்றி வந்து கொண்டிருக்கும் நிலையில்

ஜூன் மாதத்தில் அதிக வசூல் செய்த படம் 'மெர்சல்': ஒரு ஆச்சரிய தகவல்

சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கம் ஒன்றில் கடந்த மாதம் அதாவது ஜூன் மாதம் மொத்தம் 19 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் 11 திரைப்படங்கள் பெரிய ஸ்க்ரீனில் திரையிடப்பட்டன.

லைகா நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தற்போது ரஜினியின் 'தர்பார்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயனின் 17வது படம்

இன்று நேற்று நாளை 2' படத்தின் நாயகன் அறிவிப்பு

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாகவும் மியா நாயகியாகவும்  நடித்திருந்தனர்.

ரியல் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரீல் மன்மோகன்சிங்!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் தமிழ் உள்பட