மீராமிதுனுக்கு போலீஸ் சம்மன்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவரான வனிதா மீது வழக்கு இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நிகழ்ச்சியை பரபரப்பாக்க வேண்டும் என்பதற்காகவே பிக்பாஸ் திரைக்கதை அமைப்பாளர்கள் அவ்வப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் போலீஸ் நுழைவதாகவும், வனிதாவை விசாரணை செய்வதாகவும் செய்திகளை பரப்பி வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் வனிதாவை அடுத்து மீராமிதுன் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது

ரூ 50 ஆயிரம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக தி.நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜராக மீராமிதுனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிப்பதாக மீராமிதுன் தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்பெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சி, கமல் வரும் நாட்களில் மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் பிக்பாஸ் மூன்றாம் பாகத்தின் திரைக்கதையை வடிவமைத்து வருபவர்கள் ஆரம்பம் முதலே சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதால் இந்த முறை நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே பரபரப்புடன் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது போலீஸ்! வனிதா கைதா?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய்யின் அடுத்த பட நாயகிகள் இவர்களா? 

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அனேகமாக இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்

கவின் இல்லைனா முகின்: வடிவேல் பாணியில் அபிராமி

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே தனக்கு கவின் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாகவும், விரைவில் தனது காதலை கவினிடம் சொல்லவிருப்பதாகவும் அபிராமி கூறினார்.

மீராவுக்கு முத்தம் கொடுத்த மோகன் வைத்யா! நெட்டிசன்கள் கிண்டல்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மிராமினுதுக்கு மோகன்வைத்யா லிப்கிஸ் கொடுத்தது நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

லாஸ்லியாவை கரெக்ட் செய்ய கவின் பாடிய கவிதை!

பிக்பாஸ் வீட்டில் காதல் இளவரசனாக வலம் வந்து கொண்டிருக்கும் கவினை எப்போது நான்கு பெண்கள் சுற்றி வந்து கொண்டிருக்கும் நிலையில்