டார்ச்சர் தாங்க முடியவில்லை, காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு டேக் செய்து டுவிட் செய்த பிக்பாஸ் டேனியல்

  • IndiaGlitz, [Monday,June 29 2020]

கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் டேனியல் போப் என்பதும் அவர் ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் பிக்பாஸ் போட்டி முடிந்த ஒரு சில நாட்களில் அவருக்கு திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தங்கள் குடும்பத்தை கார்ப்பரேஷன் அலுவல அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக தன்னுடைய டுவிட்டரில் டேனியல் பதிவு செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் தங்களுடைய குடும்பத்தை மிகவும் டார்ச்சர் செய்து வருவதாகவும் அவர்கள் மிகவும் மோசமாக தங்களிடம் நடந்து கொள்வதாகவும் இதனால் தங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

உடனடியாக இதுகுறித்து தங்களுக்கு உதவி தேவை என்று சென்னை கார்ப்பரேஷன், தமிழக முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல ஊடகங்களுக்கு தனது டுவிட்டை டேக் செய்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

More News

ஒரு கோடி ரூபாய் கேட்கிறாரா பீட்டர்பால் முதல் மனைவி: வனிதா அதிர்ச்சி தகவல்

நடிகை வனிதா நேற்று மாலை சென்னையில் உள்ள சர்ச் ஒன்றில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பால் அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

பின்னணி பாடகி ஜானகி வதந்தி குறித்து மகன் விளக்கம் 

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ் ஜானகி அவர்கள் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் வதந்திக்கு அவரது மகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா: 4 ஆயிரத்தை நெருங்குவதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000ஐ தாண்டிய நிலையில் இன்று 4000ஐ நெருங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குளியலறையில் விழுந்து மரணம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை அடுத்து கமல் ஆறுதல்: ஜெயராஜின் மனைவி, மகளிடம் தொலைபேசியில் பேசினார்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது