சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர் கொரோனாவால் மரணம்!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

சர்ச்சைக்குரிய பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டவர் வினோத் ஆனந்த் ஜா. இவர் பொதுமக்களால் ஓம் சுவாமி என்று அழைக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 10வது சீசனில் ஓம் சுவாமி போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது செய்த ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி காரணமாக போட்டியிலிருந்து கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஓம் சுவாமி. அவர் கொரோனா வைரஸிலிருந்து சமீபத்தில் மீண்டாலும் அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது என்றும் இன்று மதியம் அவரது உயிர் பிரிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.