ஐபிஎல் போராட்டம்: பாரதிராஜா-வைரமுத்து உள்பட பலர் கைது

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர், கவிஞர் வைரமுத்து உள்பட பல திரையுலக பிரபலங்கள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இந்த போராட்டம் ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம் இல்லை என்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசியத்தை எடுத்து சொல்லும் வகையில் நடக்கும் போராட்டம் என்றும், வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் எங்கள் போராட்டம் அறவழி போராட்டம் என்றும் வைரமுத்து பேசினார்.

அப்போது திடீரென அண்ணாசாலையில் போராட்டக்காரர்களை போலீசார் தடியால் அடித்து கலைக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த தடியடியை கண்டித்து பாரதிராஜா உள்ளிட்டோர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர், கவிஞர் வைரமுத்து ஆகியோர்களள போலிசார் கைது செய்தனர்.

More News

தோனியின் ரசிகர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல்: பெரும் பரபரப்பு

சென்னையில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஐபிஎல் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடாமல் தடுக்க பல அரசியல் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், அண்ணா சாலையில்

அஜித் குறித்து விஜய் தந்தை கூறியது என்ன தெரியுமா?

'அஜித் இன்னும் பல பிறந்த நாள்களை கொண்டாடி அவரது வாழ்க்கையும், தொழிலும் குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

சென்னை அண்ணா சாலையின் தற்போதைய நிலவரம்:

அண்ணாசாலையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை எரித்தும், பிரதமர் மோடி படத்தை அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் போராட்டம்.

அண்ணா சாலையில் போலீஸ் தடியடி: போர்க்களமானது போராட்டம்

சென்னை அண்ணா சாலையில் போலிசாரின் தடுப்புகளை உடைத்துவிட்டு போராட்டக்காரர்கள் வாலஜா சாலையில் நுழைய முயன்றதால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. 

அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்த சீமான்: பெரும் பரபரப்பு

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நூற்றுக்கணக்கான நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் சென்னை அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்துள்ளதால்