தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய பாரதிராஜா: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Monday,August 23 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் திறக்க தமிழக அரசு அனுமதித்தது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அவர்கள் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர்‌ மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்களுக்கு எங்கள்‌ நன்றிகள்‌! வணக்கம்‌.

'கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின்‌ கருப்பு நாட்களாகிவிட்டது இந்த கொரானா. படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள்‌ வெளியீடு என எல்லாம்‌ பெருமளவில்‌ முடங்கிவிட்டது. நிச்சயமற்ற எதிர்காலத்தில்‌ நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக்‌ குறியோடு நகர்ந்த நாட்களில்‌ இப்போது திரையரங்குகளை 29.8.2021 முதல்‌ 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம்‌ என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும்‌, நம்பிக்கையையும்‌ விதைக்கிறது.

ஆக்கிரமித்து ‌இருக்கும்‌ நோய்‌ விலகி, பல புதிய திரைப்படங்கள்‌ வெளியாக, திரையரங்குகள்‌ முழுமையான திருவிழாக்‌ கோலம்‌ காண காத்திருக்கிறோம்‌.

'திரையரங்கு உரிமையாளர்கள்‌, தயாரிப்பாளர்கள்‌ நிம்மதிப்‌ பெருமூச்சு விட வைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர்‌ திரு. மு க ஸ்டாலின்‌ அவர்களுக்கு தமிழ்த்‌ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ சார்பாக நன்றிகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More News

ஒரே மாதத்தில் முடிவடைந்த ஆர்.கண்ணனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

கடந்த 1972ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'காசேதான் கடவுளடா' என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில்

ஆப்கானிஸ்தான் விவகாரத்தால் நிச்சயதார்த்தத்தை கேன்சல் செய்யும் பிக்பாஸ் நடிகை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் ஆப்கானிஸ்தான் பிரச்சனை காரணத்தால் தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக வெளிவந்தது செய்தி பெரும் பரபரப்பை

கங்கனாவின் ‘தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளதால் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை கண்ணீருடன் நிறைவேற்றிய மனைவி!

சன் டிவியில் கடந்த 90களில் பிரபலமான ஆனந்த கண்ணன் கடந்த வாரம் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி சின்னத்திரை மற்றும் பெரிய திரை உலகினர்களை உலுக்கியது

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 'கோலி சோடா' நடிகர்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம்