த்ரிஷா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்சூர் அலிகான் இதை செய்ய வேண்டும்: பாரதிராஜா

  • IndiaGlitz, [Tuesday,November 21 2023]

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இந்த பிரச்சனைக்கு மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சினிமா துறையில் சக கலைஞர்களை மதிப்பது மிகவும் அவசியம். பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது. அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை. சில மேடைகள்...சில பேட்டிகள்…சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை…நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்…மேடை நாரிகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது. நடிகர் மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஓரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார்.

இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில், தானாக முன்வந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல்.

மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள... உணர்ந்துகொள்ள …பெருந்தன்மையைக் கற்றுக்கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம். கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, வலைதளங்களில் வைரலாகும் நோக்கோடு அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்”

இவ்வாறு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

More News

'ஜெயிலர்' படத்தின் மாஸ் கேரக்டருக்கு இணையானது: 'தளபதி 68' குறித்து ஜெயராம்..!

'ஜெயிலர்' படத்தில் நடித்த மாஸ் கேரக்டருக்கு இணையானது 'தளபதி 68' படத்தில் என்னுடைய கேரக்டர் என நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.  

'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் விமர்சனம்.. கெளதம் மேனனை வாழ்த்திய பிரபலம்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலம்

உங்கள் வாழ்க்கையில் பூகம்பம்: முதல் முறையாக மனைவியை பிரிந்தது குறித்து மனம் திறந்த தினேஷ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முந்தைய சீசன் போல் இல்லாமல் இந்த சீசனில் சில அதிரடி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது

இதையெல்லாம் கமல் தட்டி கேட்கவே மாட்டாரா? எல்லை மீறும் பூர்ணிமா - மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் சில தவறுகளையும் அநியாயங்களையும் தட்டி கேட்கவில்லை என பார்வையாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து வரும் நிலையில்

'தளபதி 2' ஆக மாறுமா 'தலைவர் 171? ரஜினியுடன் மீண்டும் நடிப்பது குறித்து மம்முட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் இந்த படத்தில் மம்முட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும்