தேசிய விருது புறக்கணிப்பு குறித்து பாரதிராஜா

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

சமீபத்தில் திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு தமிழ் படங்களுக்கு வெறும் நான்கே விருதுகள் மட்டுமே கிடைத்தது.

இந்த நிலையில் விருது பெற்ற கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. ஆனால் இந்த விழாவில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 11 விருது பெற்ற கலைஞர்களுக்கு மட்டுமே விருது வழங்குவார் என்றும் மற்றவர்களுக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

தேசிய விருது என்பது குடியரசு தலைவர் கையால் வாங்கும் பெருமைக்குரிய விருது என்றும், விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் குடியரசு தலைவரே விருது வழங்க வேண்டும் என்றும் கலைஞர்களால் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனையடுத்து சிறந்த தமிழ்ப்படம் விருது பெற்ற 'டூலெட்' பட இயக்குனர் செழியன் , மலையாள நடிகர் பகத்பாசில் உள்பட 68 கலைஞர்கள் தேசிய விருது விழாவை புறக்கணித்தனர்.

இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா கருத்து கூறியபோது, 'தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை திரைக்கலைஞர்கள் புறக்கணித்தது நியாயமானதுதான் என்றும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இருந்து தேசிய விருதுகளை வாங்க மறுத்து விழாவை திரைக்கலைஞர்கள் புறக்கணித்தது முற்றிலும் சரியானது என்றும், தேசிய விருது என்பது குடியரசு தலைவரால்தான் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

More News

விவாகரத்து ஆன மனைவியுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்?

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சூசன் என்பவரை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ரிஹான், ரிதான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

அஜித் உதவி செய்தாரா? இல்லையா? மாறுபட்ட கருத்துக்களால் குழப்பம்

அஜித் யாருக்கும் தெரியாமல் செய்த உதவிகள் பல என்றும், அந்த உதவிகள் ஒருசில ஆண்டுகள் கழித்து உதவி பெற்றவர்களே கூறும்போதுதான் அது வெளியுலகிற்கு தெரிய வரும் என்றும் கூறப்படுவதுண்டு.

மே தினத்தில் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, மைதானத்தில் பேட்ஸ்மேனாக ஆக்ரோஷமாகவும், கேப்டனாக கூலாகவும் செயல்படுவதால் தான் அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது.

வைரலாகும் பாடகியின் பிகினி புகைப்படம்

அஜித் நடித்த 'பில்லா' படத்தில் இடம்பெற்ற 'செய் ஏதாவது செய்', யோகி' படத்தில் இடம்பெற்ற 'யோகி யோகிதான்' உள்பட பல தமிழ்,  தெலுங்கு, இந்தி பாடல்களை பாடிய பாடகி நேஹா பாசின்.

அவெஞ்சர் படம் பார்த்து மாரடைப்பால் மரணம் அடைந்த இந்திய ரசிகர்

மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப்பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக சமீபத்தில் உலகம் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ என்ற ஹாலிவுட் திரைப்படம்