கமல்-ரஜினி யாருக்கு ஆதரவு: பாரதிராஜா பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அதிகாரபூர்வமாக கட்சியின் பெயரை அறிவித்து, 'நாளை நமதே' என்ற அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இன்னும் ஒருசில நாட்களில் தனது கட்சி பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசியலுக்கு வரவுள்ள கமல், ரஜினி ஆகிய இருவருக்கும், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒருசில திரையுலகினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் இயக்குனர் பாரதிராஜா.

இந்த நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா பின்னர் செய்தியாளர்களிடம் கமல், ரஜினி அரசியல் குறித்து கூறியபோது, 'கடைசி காலத்தில் நாட்டிற்கு ஏதாவது செய்யலாம் என்ற நம்பிக்கை ரஜினி, கமலுக்கு வந்திருக்கலாம் என்றும், ரஜினி, கமல் இருவரும் தங்களது கட்சியின் கொள்கையை தெரிவித்த பிறகு தனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.

More News

இரும்புத்திரை' மூலம் புதிய பாதையை கோலிவுட்டில் அறிமுகப்படுத்தும் விஷால்

ஒரு திரைப்படத்தை இயக்குபவர், நடிப்பவர்கள் மற்றும் படக்குழுவினர்கள் அந்த படத்தை குறைந்தபட்சம் நூறு முறையாவது பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் கண்டுபிடிக்காத குறையை, ப

மீண்டும் 100வது படத்தில் தளபதி விஜய்

கடந்த தீபாவளி அன்று வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது அனைவரும் அறிந்ததே

ஜிக்னேஷூக்கு பிரகாஷ்ராஜ் கூறிய நடிப்பு டிப்ஸ்

கடந்த சில மாதங்களாக பாரத பிரதமர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக பிரதமர் மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என்று அவர் கூறிய விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமண தேதி அறிவிப்பு

இயக்குனர், நடிகர் பார்த்திபனின் மகளும், மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவருமான கீர்த்தனாவின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி பத்மினி யார் என்றே எனக்கு தெரியாது: தீபிகா படுகோனே

சஞ்சய் லீலா பன்சாலி நடிப்பில் தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவத்' திரைப்படம் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் கடந்த வாரம் வெளியானது. நான்கு மாநிலங்களில் இந்த படம் வெளிவரவில்லை