close
Choose your channels

மன்றாடிக் கேட்கின்றோம், மனது வையுங்கள்: இயக்குனர் இமயம் வேண்டுகோள்

Friday, November 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாயார் 30 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் இன்று காலை முதல் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இதுகுறித்து கூறியதாவது:

எழுவர் விடுதலையில் உச்சநீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை. ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும், தமிழக அரசு, அனைத்துக் கட்சி தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்திற்கு உரியது

தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி

ஒரு விடியற்காலை
பொழுதுக்காக
கண்ணீர் மல்க
காத்திருப்பது
வேதனைக்குரியது....
மதிப்புமிக்க ஆளுநர்
மற்றும் ஆட்சியாளர்களே
மன்றாடிக் கேட்கின்றோம்
மனது வையுங்கள்....
உடனே விடுதலை தாருங்கள்’

இவ்வாறு பாரதிராஜா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment