ஒரே படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் பார்த்திபன்

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் அவருடைய சிஷ்யர் பாக்யராஜூம், அவருடைய சிஷ்யர் பார்த்திபனும் ஒரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இதே மூவர் 'தாவணிக்கனவுகள்' படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'காற்றின் மொழி' படத்திற்கு பின்னர் ஜோதிகா நடித்து வரும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் தெரிந்ததே

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் குருசிஷ்யர்களான பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். ஜோதிகாவின் முந்தைய படமான 'காற்றின் மொழி' படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியை வேடத்தில் ஜோதிகா நடித்து வரும் இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.