தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: முதல்வரை சந்தித்த பின் பாரதிராஜா - சீமான் பேட்டி

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை இயக்குனர் பாரதிராஜா மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் சற்றுமுன்னர் சந்தித்தனர். தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதி கொடுத்ததாகவும் கூறிய இருவரும் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது சீமான் கூறியபோது, ‘முதல்வரை நேரில் சந்தித்து பேசியபோது 7 பேர் விடுதலை குறித்து பேசியதாகவும், 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு உறுதியாக இருப்பதாகவும் கண்டிப்பாக இதுகுறித்து போராடுவோம் என்று தன்னிடம் முதல்வர் கூறியதாகவும் சீமான் தெரிவித்தார்.

மேலும் அனைத்து துறைகளிலும் இந்த அரசு வேகமாக இயங்குகிறது என்றும் குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் அவரை பாராட்டுகிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதையும் மீறி நல்லது செய்வதை பாராட்ட வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பாரதிராஜா கூறியபோது ’முதலமைச்சரின் செயல்பாடுகள் சரியாக உள்ளது என்றும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார்.

More News

12ஆம் வகுப்பு தேர்வை நடத்தலாமா? தமிழக அரசுக்கு கமல் ஆலோசனை!

சமீபத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு  குறித்த அறிவிப்பை

அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய அசத்தல் வீரர்!

தனது முதல் டெஸ்ட் தொடர் போட்டியிலேயே நியூசிலாந்தை சார்ந்த இளம் வீரர் கான்வே இரட்டை சதம் அடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

டைட்டில் ரோலில் நடிக்கும் காஜல் அகர்வால்: இயக்குனர் இவர் தான்!

பொதுவாக நடிகைகள் டைட்டில் ரோலில் நடிப்பது மிகவும் அரிதான நிகழ்வாக இருந்து வரும் நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது டைட்டில் ரோலில் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

அவ்வளவு ஈசியா நடக்கல… எஸ்பிபி முதல் சான்ஸ் குறித்து மனம் திறந்த பால்ய நண்பர்!

50 ஆண்டுகளுக்கு மேல் தென்னிந்தியாவையே தனது குரலால் கட்டிப்போட்டு வைத்து இருந்த ஒரு கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

மகன், மகள் பெயரில் ரொக்கமாக கொரோனா நிதி கொடுத்த நடிகர் சூரி!

தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வமான கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தரும் வகையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் நிதி உதவிகளை செய்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.