close
Choose your channels

சென்னை விமான நிலையத்தில் பிரபல இயக்குனர்கள் கைது

Thursday, April 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பிரபல இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்த சில நாட்களாகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் திரையுலக பிரபலங்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குனர்கள் சென்னை விமான நிலையத்தின் நுழைவுவாயில் அருகே நின்று கோஷமிட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டு பிரதமர் தமிழகம் வந்தால் அவரை பச்சை கொடி காட்டி வரவேற்போம் என்றும், அதுவரை பிரதமர் தமிழகத்திற்கு வரவேண்டாம் என்றும், பிரதமரே திரும்பி போ என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

இதனையடுத்து பிரதமருக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment