இந்தியாவின் காஸ்ட்லி பிச்சைக்காரர்? இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

மும்பை பகுதிகளில் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்துவரும் ஒரு நபர் உலகிலேயே மிகப்பெரிய பிச்சைக்காரர் என அறியப்பட்டு இருப்பதோடு அவருடைய வாழ்க்கை முறையைப் பார்த்து பலரும் அதிர்ச்சியை அடைந்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரப் பகுதிகளில் தினமும் 10 – 12 மணிநேரம் வரை கடுமையாக பிச்சை எடுத்து வாழ்ந்து வருபவர் பரத் ஜெயின். இதை அவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு என்றில்லாம் பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாகவே பல வருடங்களாக செய்து வருகிறார். இந்நிலையில் அவருடைய சொத்துமதிப்பு கிட்டத்தட்ட ரூ.7.5 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

பரத் ஜெயின் மும்பையை ஒட்டி இருக்கும் சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய பகுதிகளில் பிச்சை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. வெறுமனே சாப்பாட்டிற்கு மட்டுமே பிச்சை எடுக்கும் மற்ற பிச்சைக்காரர்களைப் போல இல்லாமல் இவர் தினமும் 12 மணி நேரம் வரை தன்னுடைய தொழிலை செய்துவருகிறார். அந்த வகையில் ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 ரூபாய் வருமானத்தையும் ஈட்டி வருகிறார்.

இதனால் பரத் ஜெயின் ஒரு மாதத்திற்கு குறைந்தது 60,000 முதல் 75,000 வரை வருமானத்தை பெறுவார் எனக் கூறப்படுகிறது. இந்த வருமானத்தைக் கொண்டு பரத் ஜெயின் மும்பை பகுதியில் 1.5 கோடி மதிப்புள்ள 2 படுக்கை அறை கொண்ட குடியிருப்பு வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளார். மேலும் பரோல் பகுதியில் 1 படுக்கை அறை கொண்ட ஒரு வீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தானே பகுதியில் 2 கடைகளை சொந்தமாக வைத்திருக்கும் பரத் ஜெயினுக்கு அதன் மூலம் மாதம் 30,000 வாடகை வருவதாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 7.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் பரத் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் மற்றும் ஒரு சகோதரர், தந்தையுடன் தற்போது வசித்து வருகிறார்.

இதையடுத்து பரோல் பகுதியிலுள்ள வீட்டில் வசதியாக வாழ்ந்துவரும் இவருடைய குழந்தைகள் இருவருமே கான்வெட்டில் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ஏதோ பிச்சைக்காரர்கள் என்றால் அழுக்கு வேட்டியுடன் குளிக்காத உடலை வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக தற்போது பிச்சை எடுத்தே கோடீஸ்வரர் ஆகியிருக்கும் தகவல் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

More News

அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர் 1' : த்ரில்லிங்கான மேக்கிங் வீடியோ..!

அருண் விஜய் நடிப்பில், ஏ எல் விஜய் இயக்கத்தில், 'அச்சம் என்பது இல்லையே' என்ற படம் உருவாகி வந்த நிலையில் இந்த படத்தின் உரிமையை லைகா நிறுவனம் பெற்ற பிறகு 'மிஷன் சாப்டர் 1'

தற்கொலை முடிவில் டிடிஎப் வாசன்? அவரே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎப் வாசன் 'நான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானால் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அது கொலை என்று புரிந்து கொள்ளுங்கள்' என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி

'டிமாண்டி காலனி 2' ரிலீஸ் எப்போது? த்ரில் வீடியோவை வெளியிட்ட அஜய் ஞானமுத்து..!

கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'டிமான்டி காலனி' என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது

'தங்கலான்' படப்பிடிப்பு நிறைவு.. ஸ்மார்ட் கெட்டப்புக்கு மாறிய விக்ரம்.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகர் விக்ரம் கடந்த சில மாதங்களாக பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வந்த 'தங்கலான்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த படத்திற்காக அவர் நீண்ட தாடியுடன் கூடிய கெட்டப்பில் இருந்தார்

குடும்பமாக நீருக்குள் நீச்சல்… வேறலெவல் சேலஞ்ச் செய்த நடிகர் சரத்குமார் ஃபேமிலி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவரும் நடிகர் சரத்குமாரின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் இணைந்து வித்தியாசமான